Vallalar Universal Mission Trust   ramnad......
அருள்விளக்கமாலை

அருள்விளக்கமாலை

எட்டிரண்டு மென்னென்றால் மயங்கியெவென் றெனக்கே

எட்டாத நிலையெல்லா மெட்டுவித்த குருவே

சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே

சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே

மட்டிதுவென் றறிவதற்கு மாட்டாதே மறைகள்

மவுனமுறப் பரம்பரத்தே வயங்குகின்ற வொளியே

தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் யரசே

தாழ்மொழியென் றிகழாதே தரித்துமகிழ்ந்தருளே..