Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி வரிகள் (10)

(10) பரமலோ காதிக்க நித்தியசாம்ப் ராச்சியம்

பரபதம் பரம சூஷ்மம்

(பதவுரை) பரமலோக ஆதிக்கம் அகில உலககங்களையும் (தன் ) ஆணையில் வைத்து அருள்வது; நித்திய சாம்பிரச்சியம் மாட்சியான ஆட்சியை (நலமுற) எந்நாளும் நடத்துவது; பரபதம் மேதகு நுட்பமான மேல் நிலையது; பரம சூட்சுமம் நுண்மையிலும் மிகுந்த நுண்மையானது(-று)

(வி-ரை) உலகங்கள் பலவுள, அவைகளை வள்ளலார், : உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” எனும் நிறைவான பாசுரம் கொண்டு நினைவூட்டியுளர். அந்த அருமையை வசனப் பகுதியில் அறிக. நியதி விளைய அவ்வுலகங்களை நிர்வகித்தலின் , பரம லோகாதிக்கம்’ என்றார்./ (லோகம்-அகலிடம்-கன்கட்குக் காணப் பெறுவது. லுக் பகுத்) லோகம் ஆமுபெயராய், ஆருயிர்கள் அனைத்தையும் அறிவித்தது எனலும் ஒருவகை, எவரையும் எவைகளையும் தன் அருளாணையின் மூலம் காத்தலின் . ஆதிக்கம்’ என்றார்.

அந்த ஆதிக்கத்தொடு, நித்திய சாம்பிராஜ்யம் நிகழ்கிறது. சாம்பிராஜ்யம் சம்பிரமமான ஆட்சி சம்பிரமம் மாட்சியான ஆட்சியின் மலர்ச்சி, ஐம்பெரும் தொழில் ஆட்சியை, நலமுற எங்கும்நடத்துகிறது என்பது குஇப்பு

பரபதம்- (சாலோக சாமிப சாருபம் கடந்த) சாயுஜ்யப் பேறு பதம் வழி எனினுமாம்.

நுண்மையினும் அதி நுண்மையானது பரசுட்சுமம்’

நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்று திருவாசககும், நுணுகாது நுண்னியான்’ என்று ஆதியுலாவும் அறிவிப்பது இங்கு எண்ணத்தகும்.

திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி.

குகத்திரு இரசபதி அடிகள் உரை//

vallalarspace.com/vumt