bgcolor and text attributes of body tag
இராமலிங்க அடிகளார் ஒரு புதிய சமுதாயத்தைக் காணவிரும்பி செயல்பட்ட சமுதயா ட தத்துவ ஞானி ஆவார். சன்மார்க்க உலகு என்ற
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உலகை அமைக்க அவர் செய்த முயற்சிகள்
இன்னும் வடலூரில் காணப்பாடுகின்றன. தன் உடன் இருந்த அடியவர்கள் தன்னைப்புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருந்த போதும், சித்திவளாகம்
மாளிகையில் தனித்து மரணமிலாப் பெருவாழ்வுக்கு – தன் உடலை பிறர்கண்ணில் இருந்து மறைத்துக் கொள்ள விரும்பிய காலத்திலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றிப் பேசி வந்தார்.
சமுதாய சிந்தனையாளர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு கண்ணிற்கும் இமைக்கும் உள்ள தொடர்பை போன்றது. இராமலிங்க அடிகளார் ஓர் புறம் புதிய சமுதாயத்தை ஆன்மநேய ஒருமப்பாட்டு உரிமையில் அமைக்க ஆயத்தங்கள் செய்தார், அவரை எதிர்த்தவர்களை சந்திக்கவும் திருத்தவும், தன்னை வளர்த்துக்கொள்ளவுமாக அவர் இருந்தார்....தொடரும்..