Vallalar Universal Mission Trust   ramnad......
சிர நடு சிற்றம்பலம்

Type the title

சிர நடு சிற்றம்பலம்


தலைநடுவே விளங்கும் தனிப்பெருந்தலைவன்

இறைவன் ஒவ்வொரு மனித தேகத்திலும் பூரணமாக விளங்குகின்றார்/ உச்சிங்குங்கீழே உண்ணாவுக்கு மேலே புருவமத்திக்கு நேர் உட்பாகத்தில் தலைநடு இடத்தில் ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையோடு எப்போதும் கருணை விளக்கென பிரகாசிக்கின்றார்.

உச்சிக்கு கீழே உண்ணாவுக்கு மேலே, நிதம் வைச்ச விளக்கு எரியுதடி வலைப்பெண்ணே

சித்தர் பாடல் அதாவது

நமது தலையில் மண்டை ஓட்டின் உள்ளே பெருமூளை, சிறுமூளை, முகுளம் என்ற மூன்று மூளைப்பகுதிகள் உள்ளது பெருமூளைக்கு கீழே ஓங்கார முகுள மூளைக்கு மேல் ஓர்குழி உள்ளதாம். அந்த குழி கர வடிவத்தில் உள்ளதாம்( cerebro spinal cavity) இதற்கு மேல் உள்ள வெற்றிடத்தில் தான் ஆன்மப் பிரகாசம் சதா நான் நான் என்ற வண்ணமாய் அறிவாகாயமாய் சுடர்விட்டுக் கொண்டு இருக்கின்றதாம். இந்த மெய்ஞ்ஞான (சத்தியஞான சபை) உணர்வுக்கு உள்ளீடாய் இருப்பது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி கடவுட் பிரகாசம்.