Vallalar Universal Mission Trust   ramnad......
இறைக்கொள்கை தொடர்ச்சி



அளவையெல்லாம் கடந்து , மனங்கடந்து மற்றை அறிவையெலாம் கடந்து கடந்தமலயோகர் உளவையெலாம் கடந்து, பதங்கடந்து கடந்து நிற்கும், கடவுளாவான்.

வன்பு கலந்தறியாத மனத்தோர் தங்கள் மனங்கலந்து, மதிகலந்து வயங்காநின்ற என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம் அவைகலந்து உள்ளியங்குகின்ற அன்பு கலந்து அறிவு கலந்த இறையாவான்.

சொல்லொழியப் பொருளொழியக் கரணமெல்லாம் சோர்ந்தொழிய உணர்வொழியத் தனித்து வேறாஅகி நிற்பவனுமாவான்.

கருணையெனும் பழம்பழுத்த வான் தரு

ஆவான்,.

சொற்போதற்கு அரும்பெரிய மறைகள் நாடித் தொடர்ந்து அயர்ந்து இணைத்துத் துலங்கி ஏங்கிப் பிற்போதே தான் விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெருங்கருணைப் பெருவாழ்வு ஆவான்.

சமயங்களையும் கடந்த ஒரே கடவுளைக் கண்ட பெருமை தமிழ்ச் சான்றோர்க்கு உண்டு எனினும், அதனை ஒரு கோட்பாடாக ஆக்கிக் காட்டிய பெருமை வள்ளலாருக்கே உண்டு எனலாம்.

பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்

புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும் கண்ணாகக்

காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி, மயல்கோடை எல்லாம்

தணிக்கின்ற தருவே! பூந்தடமே! ஞானச்

செங்ககுதம் மலரவரும் மதியே! எல்லாம் செய்யவல்ல

கடவுளே தேவ தேவே!!

(மகா..48)

இவ்வாறு கடவுளை நவ நிலைகளைக்கடந்தவராகவும் ஆறு அந்தங்களைக் கடந்தவராகவும் ஏனைய கடவுளரின் தெய்வ நிலைகளையெல்லாம் கடந்தவராகவும் வேதாந்தமாகவும் சித்தாந்தமும் காட்டும் தனித்தனி முதன்மைக்கும் அப்பாற்பட்டவராகவும் எல்லாச் சமயங்கட்கும் பொதுவானவராகவும் உணர்ந்து அனுபவிக்கப்படுபவராகவேயல்லாமால் எவ்வாற்றாலும் அறியமாட்டாதவராகவும் அருட்பெருஞ்ஜோதியாம் தனிப்பெருங்கருணை வடிவுடையவராகவும் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் உய்யும் அருள்வழி காட்டுபவராகவும் வள்ளலாரால் விளக்கப்பெற்றுள்ளமை அவரது திருவருட்பாவைக் கற்றுணர்ந்தார்க்கு தெள்ளி திற்புலனாகும்.