புருவ மத்தியின் சிறப்பு
1. நம் தேகத்தின் மூன்றாவது கண் புருவ மத்தி
2. இந்த இடத்தில் ஆன்மா விளக்க விசேஷம் உள்ளது.
3. இதற்கு முச்சுடர், முப்பால், மஹாமேரு, இலாடம் என்றும் வேறு பெயர்கள் உண்டு.
4. தகுந்த குரு மூலம் மூன்றாவது கண் ஆகிய நெற்றிக் கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
5. நெற்றிக் கண்ணை திறக்கப் பெற்றவர்களுக்கு எல்லா விஷயங்களூம் பட்ட பகல் வெளிச்சம் போல் தெரியும், இவர்கள் பார்வையினால் இறந்தவன் உயிரோடு எழுவான்.
7 Comments
பெண்கள் பொட்டு வைப்பது தங்களை யாரும் வசியம் செய்வதில் இருந்து தப்பத்தான்,
T.G.Ramalingam
ramalingamtg1942@yahoo.co.in
Banglore-India
தயவு,கருணையை வாழ்வின் குறிக்கோளாக கொண்டு வாழும் அன்பர்களுக்கு நல்ல சுத்த சன்மார்க்க பெரியோர்கள் குருவாக வாய்க்க பெறுவார்கள்.தயா பெருஞ்சோதி இறைவனையும்,வள்ளல் பெருமானையும் கருணையில் கண்டு கொள்பவர்களுக்கு கடவுள் சன்மார்க்க அன்பர் மூலம் தன் திருவடியை வெளிபடுத்துவார்.ஒருவரிடம் கருணையுள்ள பார்வையால் தயவு செய்யலாம்.தயவு உள்ளவர்கள்,கருணை உள்ளவர்கள் கடவுள் அறிவை பெறுவார்கள்.வள்ளலார்
கருணையுடன், அருள்ஜோதிசுஜாதா.
மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில், ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.
இரு விழிகள் மூக்குமுனை குறிப்பாய் நிற்க,
எண்ணத்தைப் புருவங் களிடைநிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்
கருத்துக்கு இந்நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்
அருவ நிலை யாம்ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்க மாகும்.
(தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் - உலக சமாதானம் 233)
ஏறுபடி என்று சொல்லப்படும் ஆக்கினைத் தவத்தினால் பொருள் கவர்ச்சி நீங்கும். தன்னிலை விளக்கம் கிடைக்க வழி திறக்கும். விரும்பிய நல்வழியில் நிற்கும் திறன் கிடைக்கும். ஆசை அளவோடு நிற்கும், பேராசையாக விரியாமல் தடுக்கப்படும். விளைவறிந்து செயல்படும் அயரா விழப்புநிலை கிடைக்கும். புறமனத்திற்கு நுட்பமும், வேகமும்-விருத்தியாகும். பொருள் அனுபோகத்திலேயே நாட்டம் செல்வது தவிர்க்கப்படும். புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். Suppresion, முரட்டு வைராக்கியம், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட கடுஞ் சித்தம் இவை ஏதும் இன்றி, இயல்பாகவே புலன்கள் அடங்கிப்போகும்.
ஆக்கினையின் பெருமையை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதன் மகிமையைப் பெரியோர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நாசிநுனி என்றால், துவாரங்கள் இருக்கும் கீழ் நுனி அன்று, நெற்றியை ஒட்டிய மேல் நுனியாகும். முத்து முகப்பு என்று இதனைச் சித்தர்கள் அழகுற வர்ணித்துள்ளனர். புருவங்கள் இரண்டும், மூக்கும் கூடும் முச்சந்தி வீதி என்ற உவமை ஆகுபெயராக இதனை விளக்குவார்கள். ஐந்து ஆதாரங்களுக்கும் மேலே ஆக்கினையானது ஆறாவதாக இருப்பதால், பஞ்சனை மேல் இருக்கை என்று உருவகப்படுத்துவார்கள்.
அடுத்தவன் என்ன தவறு செய்கின்றான் என்பதைத்தான் கவனித்து
தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றனர்.
புருவ மத்தியின் பால் கவனம் சென்றால், பிறத்தியாரை சன்மார்க்கிகள்
யாரேனும் பார்ப்பார்களா...
சங்கங்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் தெரியுமா...
வெறும் அன்னதானம் மட்டும் போட்டுவிட்டு, அக வழிபாட்டினை
யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டேன் என்கின்றனர்.
அடுத்த நாளுக்கு மெனக் கெட வேண்டியிருப்பதால்,
அது குறித்து அவர்களுக்கி சிந்தனையும் கிடையாது.