ஞானத் திண்ணை
கொரோனா நீங்க வேண்டி - அகவல் வழிபாடு
சன்மார்க்க சங்கத்தீர்.... ! தங்கள் தாள் பணிந்து ஒரு வேண்டுகோள்...!

🙏🙏🔥🙏🙏

கொரோனா எனும் கொடிய வைரசால் உலகமே செய்வதறியாது மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்கள் மடிந்துள்ளன. இலட்ச கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலக மக்கள் பெருத்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அறிவியல் அறிஞர்களும் , மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் செய்வதறியாது விழிபிதுங்குகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக... ஆட்சியாளர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து... பொதுமக்களை வீட்டிலேயே தனித்திருக்கச் செய்துள்ளனர்.

இச் சூழலில் , நிறைமொழி மாந்தர்... என்று தொல்காப்பியமும் திருக்குறளும் கூறும் தமிழ் ஞானச் சித்தர்கள் வழியில் ... வாழையடி வாழையாய்த் தோன்றிய வள்ளல் பெருமானார் வழியில் பயணிக்கும் அன்பர்களே...!

மண் உலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோது இசைத்தபோது எல்லாம்

நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்.!

என்று பாடிய வள்ளல் பெருமானார் வழியில் பயணிக்கும் அன்பர்களே...!

வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்ற பற்றத் தலைப்படும் தானே!

என்பது திருமூலர் வாக்கு.

அவ் வாக்கிற்கு ஏற்ப...

அருள் அனுபவத்தின் உச்சத்தில் எழுதப்பட்ட திருஅருட்பாவின் அருட்பெருஞ்ஜோதி அகவலை மன ஒருமையுடன் வாசித்தால் அனைத்துத் தகவலும் நன்மையாய் கிடைக்கும் என்பது சன்மார்க்கத்தாரின் நம்பிக்கையாய் உள்ளது.

ஆதலால் ...

இக்கட்டான இன்றைய சூழலில் மனித இனத்தின் துன்பங்கள் எல்லாம் நீங்க வேண்டி....

உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் தங்கள் இல்லங்களில் ஞான தீபத்தை ஏற்றிவைத்து.... அருட்பெருஞ்ஜோதி அகவலை வாசித்து வழிபட வேண்டுமாய்த் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயண வழிபாட்டின் நிறைவில் .... புருவ மத்தியில் மன ஒருமையுடன்.... கொரோனாவினால் உலகில் ஏற்படும் உயிர்ப்பலியையும் அச்சத்தையும் துயரையும் இடர்பாட்டையும் ... நீக்கி அருள் செய்ய வேண்டுமாய்...! பிராத்திக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

🙏🙏🔥🙏🙏

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்தை இணையத்தின் வழி... தினசரி கூட்டு வழிபாடாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க அன்பர்கள், தினசரி இந்திய நேரப்படி விடியற்காலை 4.30 மணி முதல் 6.30 மணியளவில் பன்னாட்டுத் தொலைபேசி வாயிலாகவும் இணைந்து .... இவ் அகவல் பாராயண வழிபாட்டில் பங்காற்ற அழைக்கின்றோம்.

பன்னாட்டுத் தொலை பேசி வாயிலாக இணைய விரும்புவோர் தங்கள் ஆன்ராய்டு செல்பேசியில் கூகுல் ப்லே ஸ்டோர் சென்று free conference call app - யைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். அதில் Join பகுதியை அழுத்தி.. Dial in number பகுதியில் IN 01725100945-யைப் டைப் செய்து , அதன்பின் Access code பகுதியில் 592242# என டைப் செய்வதன் மூலம் இவ் இணைய வழிபாட்டில் இணையலாம். அல்லது கீழ்க் காணும் லிங்கைப் பயன்படுத்துவதன் மூலமும் இணையலாம்.

👇👇👇

இணைய தொலைபேசி எண் கீழே பார்க்க:
Dial-in number (IN): 0172 510 0945
Access code: 592242#
International dial-in numbers: https://fccdl.in/i/rvramkumar29
Online meeting ID: rvramkumar29
Join the online meeting: https://join.freeconferencecall.com/rvramkumar29

🙏🔥🙏

இணைய வழி பன்னாட்டுத் தொலைப்பேசி வழியாக நடைபெறும் அருட்பெருஞ்ஜோதி அகவல் வழிபாட்டிற்கான செயல் திட்டம் வருமாறு...

இணைய வழி... அகவல் வழிபாட்டில் பங்கெடுத்து அகவல் வாசிக்க விருப்பமுள்ள அன்பர்கள் பத்து நிமிடம் முன்பாக ... விடியற்காலை 4.20 மணியளவில் இணையத்தில் இணைய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

இணைப்புக் கிடைத்தவுடன் , அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை ஓதி... தங்கள் பெயர் ஊரைக் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இணைந்த அனைவரும் அறிமுகமான பின்... அனைவரும் இணைந்து அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை ஓத வேண்டும்.

அதன் பின்...

★சற்குரு வணக்கம் / பரசிவ வணக்கம் ..

அதன்பின்
★திருஅருட்பா - திருப்பள்ளியெழுச்சி வாசித்தல்.

அதன் பின்...

★அருட்பெருஞ்ஜோதி அகவல் கூட்டு வழிபாடு.

இணையத்தில் இணைந்த அன்பர்களின் ஸீனியார்ட்டி வரிசைப்படி ஐம்பது ஐம்பது வரிகளாகச் சுழற்சி முறையில் 1596 அடிகளையும் வாசித்தல்.
(ஒருவர் வாசிக்கும் போது மற்ற அன்பர்கள் மியூட்டில் இருத்தல் அவசியமாக பின்பற்றப்பட வேண்டும்)

இணைந்த அனைத்து அன்பர்களும் சுழற்சி முறையில் அகவலை வாசித்தப்பின்... அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தை... அதே சுழற்சி முறை மாறாமல் ஒவ்வொரு பாடலாக வாசிக்க வேண்டும்.

அதன்பின்....

கொரோனாவால் உலகில் ஏற்பட்டுள்ள உயிர்பலியையும் அச்சத்தையும் துயரையையும் இடர்பாட்டையும் தவிர்தருள வேண்டி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து விண்ணப்பித்தல்.

அதன்பின்..

★நினைந்திருத்தல் (தவம்)

★சத்திய சிறு விண்ணப்பம்

அதன்பின்...

★ஜோதிப்பாடல்...

★நன்றி நவிலல்...

அனைவரும் மகாமந்திரம் கூறி நிறைவுசெய்தல்.....!

🙏🙏🙏🙏