Sathiyadeepam Sivaguru
2017 காலண்டர் வெளியிடப்படுகின்றது - சத்திய தருமச்சாலை தொடங்கிய மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் வாசிக்கப்பட்ட 150ஆவது ஆண்டில் (1867-2017)
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அன்பர்களுக்கு வணக்கம்.

     பசித்த உயிர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குதல், உயிர்க்கொலையை எவ்வித தந்திரத்திலாவது தடைசெய்தல், ஆகிய இரண்டு கொள்கைகளை முதன்மையாகக் கொண்டே இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று வள்ளலாரால் எழுப்பப்பட்ட முதல் திருக்கோயிலே சத்தியதருமச்சாலை. அங்கு வாசிக்கப்பட்ட முதல் சன்மார்க்க மாமறையே ஜீவகாருண்ய ஒழுக்கம். திருஅருட்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்டு தருமச்சாலை தொடக்க நாள் விழாவில் வாசிக்கப்பட்டு அனைவருக்கும் உணர்த்தப்பட்டது இந்த வழிபாட்டு முறை. வள்ளலார் இவ்விரண்டையும் நமக்கு அருளிய 150ஆவது ஆண்டு இது. (1867-2017)

         இந்த 150ஆவது ஆண்டில்,  பூசதினமும் (23.10.2016) சன்மார்க்கக் கொடிகட்டிய தினமும் (ஐப்பசி 7) சேர்ந்த நன்னாளில் சத்தியதீபம் சன்மார்க்கப் பதிப்பகத்தின் சார்பாக ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலினை அடிப்படியாக கொண்டு 2017 ஆம் ஆண்டு காலண்டர் வெளியிடப்படுகின்றது.

      ஒரு காலண்டர் விலை ரூபாய் 12 ஆகும்,  குறைந்தபட்சம் 50 காலண்டர் பெற்றுக் கொள்ளலாம். காலண்டரில் தங்களின் பெயர் அல்லது சங்கத்தின் பெயரும் அச்சிட்டு தரப்படும். பெயர் மற்றும் சங்கம் பெயர் அச்சிட விரும்புவோர் குறைந்தபட்சம் 100 காலண்டர் பெற்றுக்கொள்ளலாம். அச்சிட ஒரு காலண்டருக்கு 2 ரூபாய் வீதம் 200 ரூபாய் ஆகும்.

தொடர்பு கொள்ளவும்.

சத்தியதீபம் சன்மார்க்கப் பதிப்பகம், வடலூர்
0975 111 3330,  083443 91443

Jeevkarunya Ozukkam (Vallalar - Sanmarkkam) Calender for 2017 - Please contact for Orders :
 0975 111 3330, 083443 91443

sathiyadeepam calendar2.jpg

sathiyadeepam calendar2.jpg

sathiyadeepam calendar1.jpg

sathiyadeepam calendar1.jpg

3 Comments
Anandha Barathi
Good design and concept from Sathyadeepam publication, will contact you for orders, Thanks.
Tuesday, October 18, 2016 at 11:00 am by Anandha Barathi
Vallalar Groups
Nice
Wednesday, October 19, 2016 at 00:13 am by Vallalar Groups
Sathiyadeepam Sivaguru Vadalur
nanri ayya
Wednesday, October 19, 2016 at 05:10 am by Sathiyadeepam Sivaguru Vadalur