SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ஞானசரியை
சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன்மார்கத் 
  திருநெறியே பெருநெறியாம் சித்தியெலாம் பெறலாம் 
ஒர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் 
   உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை  அறிந்திலீரே 
வார்ந்த கடல் உலகறிய மரணம் உண்டே அந்தோ 
   மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும்  சம்மதியா 
சார்ந்திடும் அம மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் 
    தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே   பாடல் எண் 21

ஜாதி,மதம்,சமயம் போன்ற பிளவுகளில் பிளவுபட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்ற  மக்களே அனைவும் ஒன்று சேர்ந்து வாருங்கள் .சிறு நெறியில் சிக்கித் தவிக்கின்ற மக்களே சமரச சன்மார்கத் திருநெறி ஒன்றுதான் பெரு நெறி. இதிலே வந்தால் சித்துகள்  எல்லாம் பெறலாம். நீங்கள் உணரவேண்டியது ஒன்று.உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவீர்.ஆனால் உலகம் எலாம் கண்டிடும்  ஓர் உளவு உண்டு அதை அறியவில்லையே.சூழ்ந்துள்ள கடல் உலகம் எல்லாம் அறிந்துகொண்டுள்ள ஒன்று உண்டு. அதுதான் மரணம்.அந்த மரணத்தை எண்ணினால் அடிவயிற்றை முறுக்காதோ.கரணம் எலாம் கலங்காதோ.மரணம் என்றால் ஜடம் என்கிற ஒரு துரும்புகூட சம்மதிக்காதே. யாரையும் விடாமல் தாக்குகின்ற மரணமதைத்      தடுத்திடலாம் கண்டீர்.  அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா. ஒப்பீடு இல்லாத சிற்சபை நடனமதைத் தரிசனம்  அதாவது கண்ணால் காணுங்கள்.சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்தால் மரணத்தைத் தடுத்திடலாம் .    இது வள்ளலார் வாக்கு