இறைவனிடம் வள்ளலார் தொடுத்த வினா:
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும்,எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்,தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை
(இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதவேண்டிய அவசியம் இல்லை.எளிமையாகப் புரிகின்ற பாடல்)
இந்த வினாவிற்கு இறைவனின் பதில்:
எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உன்னை
அல்லாது இலை எனும் அருட்பெருஞ்சோதி (அகவல்)
எல்லாம் வல்ல சித்துகள் எல்லாவற்றையும் வள்ளலாருக்குக் கொடுத்துவிட்டு எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இறைவன் பதில் அளித்தான்
4 Comments
On the other hand, Vallalar takes up நோன்பு as a soulful pleasant practice. That is what, 'நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவர்' refers to.
Thank you. All possible! Exalt The Almighty Grace only!
கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
இந்த பாடலில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளபடி மற்றவர்கள் கற்பங்கள் பலகோடி காலம் முயன்றும் இறைவனை அடையாமைல் நிற்க, நம் வள்ளலாரோ இந்த பிறவியில் 32 ஆண்டுகள் பெருந்தவம் செய்து இறைநிலையை அடைந்தார். இதைத்தான் வள்ளலார் இறைவனிடம்
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும்,எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்,தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை.
என்றும்கூட கேட்டிருக்கலாமே!