இறைவனிடம் வள்ளலார் தொடுத்த வினா:
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும்,எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்,தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை
(இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதவேண்டிய அவசியம் இல்லை.எளிமையாகப் புரிகின்ற பாடல்)
இந்த வினாவிற்கு இறைவனின் பதில்:
எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உன்னை
அல்லாது இலை எனும் அருட்பெருஞ்சோதி (அகவல்)
எல்லாம் வல்ல சித்துகள் எல்லாவற்றையும் வள்ளலாருக்குக் கொடுத்துவிட்டு எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இறைவன் பதில் அளித்தான்
Write a comment