வள்ளலார் அருளிய உணவுக்குறிப்புகள்
தயவு - திருச்சிற்றம்பலம்
வள்ளலார் உரைநடை - உபதேச பகுதி - நித்திய கரும விதி - சாதாரண விதியில் இருந்து தொகுக்கப்பட்டவைகள்:
கொள்ளப்பட வேண்டியவைகள்:
- காலையில் களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டு பின் வரும் ஜலம் மட்டும்
- காலையில் பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி, தூதுளையிலை, முசுமுசுக்கையிலை மற்றும் சீரகம் இவைகளின் சூரணம், நல்ல ஜலம், பசுவின் பால் மற்றும் நாட்டு சர்க்கரை இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது
- காலையில் பசி அதிகரித்து இருப்பின் பேயன், ரஸ்தாளி, பங்காள வாழைப்பழ வகைகளோடு சர்க்கரை சேர்த்து
- முதற்பக்ஷம் சீராகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளையும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள்
- கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கு மாத்திரம்
- பழ வகைகளில் பேயன், ரஸ்தாளி வாழைப்பழம் சிறிதளவு மாத்திரம்
- மிளகு, சீரம் அதிகமாக
- தாளிப்பில் பசு வெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்
- கத்திரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கக்காய், பீர்க்கங்காய், கலியாண பூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் இவைகளின் பதார்த்த வகைகள்.
- இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் இவைகளை அடுத்தடுத்து கறி செய்து கொள்ளுதல் கூடும்
- புளியாரைத் துவையல் தினந்தோறும்
- கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகள் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும் செய்த கறிகள்
- புளித்த தயிர்
- முளை கட்டாத அல்லது முளை கட்டின துவரம் பருப்பு, மிளகு சேர்த்து கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல். இதனோடு குறைந்த அளவு நெய் மாத்திரம்
- சுண்ணம் தடவி மேலழுக்கு நீக்கிய சுன்னத்தின் சூரணம் கலந்த ஐந்தில் மூன்று பங்கு சூண்ட காய்ச்சிய நல்ல ஜலம்
- வெந்நீர்
- பகற் போஜனத்தின் பதினேழரை நாழிகைக்குப் பிறகு சர்க்கரை சேர்த்த பேயன், ரஸ்தாளி, பங்காள வாழைப்பழம்
- பகலில் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் தாம்பூலம் பஞ்சவாசங்களோடு போட்டு பின் ஊறிய ஜலம்
- இரவில் சூடான பதார்த்தங்கள் மாத்திரம், அவை சிறு கத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியன
- சுமார் 12 நாழிகைக்கு மேல் நன்றாக காய்ச்சிய பால் அல்லது காலையில் பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி, தூதுளையிலை, முசுமுசுக்கையிலை மற்றும் சீரகம் இவைகளின் சூரணம், நல்ல ஜலம், இவைகள் கலந்த நன்கு காய்ச்சிய பால்
- சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவும் குறைய அதிக வெற்றிலை அதிகப்பட கலந்து பஞ்சவாசத்தோடு போட்டு கொண்டு முன் வரும் ஜலம் மாற்றும் திப்பி அல்லாது இடையில் வரும் ஜலம் மாத்திரம்
சிறிதளவே கொள்ளப்பட வேண்டியவைகள்:
- உப்பு
- புளி
- மிளகாய்
- வெங்காயம்
- வெள்ளை பூண்டு
தவிர்க்கப்பட வேண்டியவைகள்:
- குளிர்ந்த ஜலம்
- கருணை கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள்
- பேயன், ரஸ்தாளி வாழைப்பழம் தவிர மற்ற பழ வகைகள்
- பழைய கறிகள்
- கடுகு
- வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள்
- சர்க்கரை பொங்கல், ததியோதனம், புளி சாதம் முதலிய சித்திரானங்கள்
- கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை தவிர்த்த மற்ற கீரைகள்
- துவரம் பருப்பு அல்லாத மற்ற பருப்பு வகைகள்
- புலால்
- இரவில் தயிர், கீரை, வாயுவான பதார்த்தம், குளிர்ச்சியான பதார்த்தம்
3 Comments
வள்ளலார் சொன்ன உணவு முறையை முறையாக தொகுத்து கூறியது அருமை.தொடரட்டும் உங்களின் சன்மார்க்க செய்திகள்.வள்ளலார் வாழ்த்துகள்.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதிசுஜாதா.