1 . சைவம்
2. வைணவம் முதலிய சமயங்களிலும்,
1. வேதாந்தம்
2. சித்தாந்தம் முதலிய மதங்களிலும்,
"லக்ஷியம் வைக்க வேண்டாம்". அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.
ஏனெனில்?
அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,
இவைகளுக்கெல்லாம் "சாக்ஷி நானே யிருக்கின்றேன்"
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.
-- பேருபதேசம்..4 Comments
எனவே சன்மார்க்க அன்பர்கள் அகத்தில் இதனை உணர்ந்து, மௌனமாக, உள் ஜோதியாக இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நாடுவதற்கான மிக அற்புதமான வாசகம் இது. எனவே இதனை இடம், பொருள், காலம், பக்குவம் அறிந்து இதை உபயோகப்படுத்த வேண்டும்.
குமரேசன் அய்யா உங்களின் வார்த்தை சன்மார்க்க வார்த்தை!
All possible, Exalt Him Only!
Arut Prum Jyothi,
Durai