புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன?:
v மனம்
v வாக்கு
v காயம்
என்னும் மூன்றினாலும் அடையும்.
மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும்,
வாக்கினிடத்தில் நால்வகையும்,
சரீரத்தினிடத்தில் நால்வகையும்,
ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். அவையாவன:-
மனத்தினால் :
û பரதாரகமனம் பண்ண நினைத்தல்,
û அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல்,
û அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல்,
û முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் ,
இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.
வாக்கினால் :
û பொய்சொல்லல்,
û கோட்சொல்லல்,
û புறங்கூறல்,
û வீணுக்கழுதல் –
இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.
தேகத்தினால் :
û பிறர் மனைவியைத் தழுவுதல்,
û புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல்,
û அன்னியர்களை இம்சை செய்தல்,
û தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல்
இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள்.
பாவங்களாலடையுங் கதி யென்ன?
ê மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டாளாதி சரீரமுண்டாகும்.
ê வாக்காற் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரமுண்டாகும்.
ê தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரமுண்டாகும்.
இவை போன்றவைகளைத் தவிர்த்து :
இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.
ü அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல்,
ü பொறாமை யடையாதிருத்தல்,
ü அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல்,
ü தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் .
இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள்.
ü பொய் சொல்லாமை,
ü கோட்சொல்லாமை,
ü இன்சொல்லாடல்,
ü தோத்திரம் செய்தல் –
அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.
Vriddhachalam_Invi_1.jpg