Topic : மயில், குயில் மயில்குயில் ஆச்சுத டி |
From vinayaga moorthy , Nov 6 மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி (2) மயில்குயில் ஆச்சுத டி (3) துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் (4) வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி (5) வள்ளலைக் கண்டேன டி (6) சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் (7) சோதியைக் கண்டேன டி - அக்கச்சி (8) சோதியைக் கண்டேன டி (9) பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் (10) ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி (11) ஐயரைக் கண்டேன டி (12) allow me to give my views. i think that what vallalar meant is that whatever we see is all but illusions. the only way to see the real truth is by giving up: religion/caste:சாதி சமயச் சழக்கை rituals: துள்ளலை விட்டு ignorance: பொய்யை he says that he has given up all the above and he has seen the truth: சோதியைக் கண்டேன டி/ஐயரைக் கண்டேன டி/வள்ளலைக் கண்டேன டி. and where did vallalal peruman find the truth? at the sitchabai :அக்கச்சி ( the third eye) in tamil the letter ஃ ( ஆயுத எழுத்து ) represents the third eye. you can try saying the word அக்கச்சி or the letter ஃ you will notice that your tongue touches the soft palate (அந்நாக்கு ).
|
From Dhanapal Thirumalaisamy , Nov 8 வள்ளல் என்ன சொல்கிறார்? "பிண்டத்தில் ஆகாயம் புருவ மத்தி". ஆக புருவ மத்தியில் மயில் ஆடுகிறது. இந்த புருவ மத்தி எது? வள்ளல் சொல்கிறார். "புருவ நடுக்கண் = நெற்றி கண். இதற்கு பூட்டு மற்றும் சாவி உண்டு. அதனை குருவின் மூலம் திறந்து கொள்ளுங்கள்". புருவ மத்திக்கான சாவியை பெற்று கொண்டு தவம் செய்தால் ஏழு நிற ஒளி அனுபவங்கள் தோன்றும். அதுவே மயில் ஆடுதல். இறைவனின் தண்டம், சிலம்பு போன்ற ஓலிகள் அனுபவங்கள் தோன்றும். மயிலும் குயிலும் ஆடுவது என்பது ஒளி ஒலி அனுபவங்கள் தான். இதனை புருவமத்தியில் தான் அடைய முடியும். இந்த puruvamaththi எது? அதுவே சிற்சபை. சிற்சபையை பிண்டத்திலும் போற்சபையை அனுபவத்திலும் மட்டுமே கண்டு கொள்ள முடியும். |
From Vadivelu Velu , Nov 8 எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து. வள்ளற்பெருமான் அருமையாக தன்னுடைய பாடலில் இயற்கையைத் தொடர்புபடுத்தி ஞான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. கருணையே வடிவான கருணாமூர்த்தி தன்னுள் கண்ட மயில் ( காட்சிக்கு மயில் நடனம் ) என்று சொல்லப்படும் திருவுருக்காட்சியையும், குயில் ( இசைக்கு குயில் குரல் ) என்று சொல்லப்படும் நாத ஓசையையும் தன்னுள் கண்டிருக்கிறார் என்பதை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. அதனால் தன்னுள் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை வள்ள்ற்பெருமான் திருவாய் மலந்தருளினார். இக்கூற்றை நாம் பாடலின் முதல் கண்ணியில் மற்றும் குறிக்கோள் வைக்காமல் அடுத்தடுத்து வரும் கண்ணியில் கவனித்தோமென்றால் தெளிவு கிடைக்கும். தொடரட்டும் நமது சத்சங்கம். வளரட்டும் மெய்ஞான அறிவு. எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க. |
From Th.S.SIVAJAYAKUMAR , Nov 12 {ContentRefr:1835} |
|
4 Comments
A. Sahasranamam,
Chennai
Thanks for olium olium which has given by god in puram and agam is only by on personal realisation that is pasithiru, thanithiru, vizhithiru = you can get PADHAVI,