Vallalar Groups
மயில்குயில் ஆச்சுத டி

Topic : மயில், குயில் மயில்குயில் ஆச்சுத டி

From vinayaga moorthy , Nov 6


வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் (1)

மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி (2)

மயில்குயில் ஆச்சுத டி (3)

துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் (4)

வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி (5)

வள்ளலைக் கண்டேன டி (6)

சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் (7)

சோதியைக் கண்டேன டி - அக்கச்சி (8)

சோதியைக் கண்டேன டி (9)

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் (10)

ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி (11)

ஐயரைக் கண்டேன டி (12)

allow me to give my views.

i think that what vallalar meant is that whatever we see is all but illusions. the only

way to see the real truth is by giving up:

religion/caste:சாதி சமயச் சழக்கை

rituals: துள்ளலை விட்டு

ignorance: பொய்யை

he says that he has given up all the above and he has seen the truth: சோதியைக் கண்டேன டி/ஐயரைக் கண்டேன டி/வள்ளலைக் கண்டேன டி.

and where did vallalal peruman find the truth? at the sitchabai :அக்கச்சி ( the third eye) in tamil the letter ( ஆயுத எழுத்து ) represents the third eye.

you can try saying the word அக்கச்சி or the letter you will notice that your tongue touches the soft palate (அந்நாக்கு ).



From Dhanapal Thirumalaisamy , Nov 8

வானம் = ஆகாயம்

வள்ளல் என்ன சொல்கிறார்?

"பிண்டத்தில் ஆகாயம் புருவ மத்தி". ஆக புருவ மத்தியில் மயில் ஆடுகிறது.

இந்த புருவ மத்தி எது?

வள்ளல் சொல்கிறார்.

"புருவ நடுக்கண் = நெற்றி கண். இதற்கு பூட்டு மற்றும் சாவி உண்டு. அதனை குருவின் மூலம் திறந்து கொள்ளுங்கள்".

புருவ மத்திக்கான சாவியை பெற்று கொண்டு தவம் செய்தால் ஏழு நிற ஒளி அனுபவங்கள் தோன்றும். அதுவே மயில் ஆடுதல். இறைவனின் தண்டம், சிலம்பு போன்ற ஓலிகள் அனுபவங்கள் தோன்றும். மயிலும் குயிலும் ஆடுவது என்பது ஒளி ஒலி அனுபவங்கள் தான். இதனை புருவமத்தியில் தான் அடைய முடியும். இந்த puruvamaththi எது?

அதுவே சிற்சபை. சிற்சபையை பிண்டத்திலும் போற்சபையை அனுபவத்திலும் மட்டுமே கண்டு கொள்ள முடியும்.

From Vadivelu Velu , Nov 8

எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே

எல்லாம் வல்லான் தனையே ஏத்து.

வள்ளற்பெருமான் அருமையாக தன்னுடைய பாடலில் இயற்கையைத் தொடர்புபடுத்தி ஞான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

கருணையே வடிவான கருணாமூர்த்தி தன்னுள் கண்ட மயில் ( காட்சிக்கு மயில் நடனம் ) என்று சொல்லப்படும் திருவுருக்காட்சியையும், குயில் ( இசைக்கு குயில் குரல் ) என்று சொல்லப்படும் நாத ஓசையையும் தன்னுள் கண்டிருக்கிறார் என்பதை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.

அதனால் தன்னுள் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை வள்ள்ற்பெருமான் திருவாய் மலந்தருளினார்.

இக்கூற்றை நாம் பாடலின் முதல் கண்ணியில் மற்றும் குறிக்கோள் வைக்காமல் அடுத்தடுத்து வரும் கண்ணியில் கவனித்தோமென்றால் தெளிவு கிடைக்கும்.

தொடரட்டும் நமது சத்சங்கம். வளரட்டும் மெய்ஞான அறிவு.

எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க.

From Th.S.SIVAJAYAKUMAR , Nov 12

{ContentRefr:1835}

4 Comments
sahasranamam
Very good explanation.
A. Sahasranamam,
Chennai
Tuesday, November 25, 2008 at 05:11 am by sahasranamam
sundaramurthy venkatasamy
Dear kumar iyah. You explained well for the peacock dance and kuil sungs through vallalar Arutt padalgal and you explined about the anubhavas of the light and thunder inside of our sole well. vazgha valmudan. irai arul peruga. Arutperum jothi andavar thunai purivaraga. Anbudan,Jothi Sundaramurthy, Chennai-600106. C/o.Jothi guru gnana sabhai,chennai. cell No.09444240399
Thanks for olium olium which has given by god in puram and agam is only by on personal realisation that is pasithiru, thanithiru, vizhithiru = you can get PADHAVI,
Thursday, December 24, 2009 at 22:12 pm by sundaramurthy venkatasamy
Muthukumaaraswamy Balasubramanian
மயில் குயில் ஆச்சுதடி எனக்கு தெரிந்த வரையில் இதன் விளக்கத்தை தர முயற்சி செய்கிறேன் நம்முடைய உடம்பில் கால் என்பது ,மண்.. வயிறு தண்ணீர் . மார்பு நெருப்பு. கழுத்து காற்று தலை வானம் அதாவது ஆகாயம். இங்கே வானத்தை புருவ மத்தி என்று கூறியிருப்பது முற்றிலும் சரியே. ஆனால் மயில் ஆடகண்டேன் என்பது சற்று விளக்கப்பட வேண்டும். மயில் ஆடுவதை பார்த்தால் அது தன தோகையை விரித்து ஆடும் அப்போது தொகையில் கண்கள் போல நிறைய இருக்கும் . அது நமது நெற்றி கண்ணை குறிக்கும் .ஒரு குருவினிடம் சென்று அவர் மூலமாக நெற்றிகண்ணை திறந்து கொண்டால் அங்கே ஒரு அசைவு தெரியும். அதை உணர்வதே மயில் ஆடகண்டது . அவ்வாறு பயிற்சி செய்துகொண்டிருந்தால் நமக்குள்ளே நாத ஓலி கேட்கும்.குயில்இதுவே குயில் iஎனப்பட்டது . என் அறிவுக்கு எட்டியது முபா நன்றி வணக்கம்
Thursday, March 17, 2011 at 03:03 am by Muthukumaaraswamy Balasubramanian
Purushothaman Janakiraman
Pls send the link of vallalar vasana(prose portion) pakuthi which one vallalar wrotes after 6th thiru arutpa(poetry portion). Pls send me the link to my email id purush_janaki@hotmail.com. Thank you.
Friday, June 17, 2011 at 11:18 am by Purushothaman Janakiraman