24.5.2009 (ஞாயிறு), 25.5.2009 (திங்கள்) ஆகியநாட்களில்
தூத்துக்குடி திருமந்திர நகரில் முப்பெரும் விழா
வரவிருக்கும் 24.5.2009 (ஞாயிறு) மற்றும் 25.5.2009 (திங்கள்) ஆகிய 2 நாட்களில் தூத்துக்குடியில் கீழ்க்கண்ட விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன.
- வடலூர் சத்திய தருமச் சாலையின் 143-ஆம் ஆண்டு தொடக்க விழா.
- திருமந்திர நகர் சத்திய தருமச் சாலைப் புதிய கட்டிடத்தில் ஜோதி ஏற்றும் விழா.
- திருமந்திர நகர் உயர்தனி இலக்கிய நூலகம் உலகிற்கு அற்பணிப்பு விழா.
விழா நடைபெறும் இரண்டு நாட்களிலும், காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திரு அருட்பா பாராயணம், ஊர்வலம், சத் விசாரம், அன்னதானம், மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற உள்ளன.
எனவே இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அன்பர்கள் அனைவரும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினைப் பெற்றுய்ய வேண்டுகின்றோம்.
இப்படிக்கு,
திரு கலியுக வரதன்,
செயலாளர், மற்றும் சங்க நிர்வாகஸ்தர்கள்.
சன்மார்க்க சங்கம்,
திரு மந்திர நகர்,
தூத்துக்குடி.
தொடர்பு செல் - (91 94429 13101)
Write a comment