இலங்கை சத்திய ஞான சபை மீசாலை வடக்கில் அமைந்துள்ளது. நிறுவனர் திரு கேதீஸ்வரன் ஆவார். அவர் நடத்திய மாநாட்டிற்கு, திரு அருட்பா கச்சேரி செய்வதற்காக, பாண்டிச்சேரி திருமதி அன்னபூரணி அவர்கள், கடந்த 31.8.2017 அன்று இலங்கை சென்றார்கள். வெற்றி அமைப்பின் மூலம், சன்மார்க்கம் சார்ந்த நூல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை, திரு நமச்சிவாயம் அவர்களால், திருமதி அன்னபூரணி அவர்கள் இலங்கை சென்ற போது, கொடுத்து விடப்பட்டன. காலத்தே அவை அங்கு சென்றடைந்ததால், மாநாட்டிற்கு வருகை புரிந்த இலங்கை நாட்டின் பல பல்கலைக் கழகங்களுக்கு திரு கேதீஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டன. வெற்றியின் பணியும், அதனை இயக்கும் திரு நமச்சிவாயம் அவர்கள், திரு பாண்டுரெங்கன் அவர்கள், திரு ஜோதி அவர்கள் ஆகியோரது தொண்டு இலங்கையில் வெகுவாகப் பாராட்டப்பட்டன. திரு கேதீஸ்வரன் அவர்களும், வடலூரிலிருந்து, சன்மார்க்க நெறி பரப்பும் நூல்களை வெற்றி அமைப்பின் நிறுவனர்கள் கொடுத்து விட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.
074.JPG
059.JPG
20140114_081130-1.jpg
20140115_074557-1.jpg
Write a comment