2.10.2011 முதல் 5.10.2011-இலங்கை வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் உலக சகோதரத்துவ தினம் கொண்டாடுதல்.
இலங்கை சாவகச்சேரி வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் உலக சகோதரத்துவ தினம் கொண்டாடுதல்.
நாள். 2.10.2011 முதல் 5.10.2011 வரை.
=0=0=0=0=
வள்ளல் பெருமான் அவர்கள், சுத்த சன்மார்க்க நெறியின் மூலம் அகில உலக சகோதரத்தை (universal brotherhood) போதித்து வந்தார்.
அதன் அடிப்படையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரி அருகே உள்ள வேம்பிராயில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், வரவிருக்கும் 2011 அக்டோபர் 2.10.2011 முதல் 5.10.2011 வரை அகில உலக சகோதரத்தை வலியுறுத்தும் வகையில் விழாக்கள் கொண்டாடுவதற்கு இந் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்தும் சன்மார்க்க அன்பர்கள் பலர் இவ்விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன், அவர்கள் திரு அருட்பா இசைக் கச்சேரி நடத்த உள்ளார். சன்மார்க்க சான்றோர்கள் பலரும் தமிழ் நாட்டிலிருந்து, இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இசைந்துள்ளார்கள்.
இவ்விழாவில் பங்கேற்க விரும்புவோர், பாஸ்போர்ட் முதலானவை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றனர்.
357
372
058
831
791
797