Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
28.2.2021 திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருட்பெருஞ்ஜோதி ஆலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்,சுவாமி சரவணானந்தா தயவு இல்லத்தில் மணி மண்டபம் கட்ட பூமி பூஜை நாள் குறித்தல்.
      28.2.2021 அன்று காலை 11.00 மணி அளவில் மேற்படி ஆலயத்தில், மூத்த சன்மார்க்க அங்கத்தினர்கள் கூடினர், கோயம்புத்தூர், திண்டுக்கல், சின்னாளப்பட்டி, மதுரை போன்ற இடங்களில் இருந்து திரளாக அங்கத்தினர்கள் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளைத் தெரிவித்தனர். வரவிருக்கும் 6.3.2021 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரையில் உள்ள நேரத்தில், வாஸ்து பூஜை நடைபெறுவதற்கு, அனைவராலும் ஏகமனதாக, தீர்மானிக்கப்பட்டது.

நாள் 6.3.2021 சனிக்கிழமை
நேரம் காலை 10.30 முதல் 11.00 மணிக்குள்.
இடம் .. திண்டுக்கல் (நத்தம் சாலை) பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி சுவாமி சரவணானந்தா தயவு இல்லம்.

காலை முதல் திரு அருட்பாவிலிருந்து முக்கியமான பதிகங்கள், சுவாமிகள் அருளிய தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை முதலான தோத்திரங்கள் சன்மார்க்க அன்பர்களால் பாடப்படவுள்ளன. எனவே, வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள், அந்நாளில், கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டப்படுகின்றது.
vlcsnap-2021-02-28-18h15m12s307.png

vlcsnap-2021-02-28-18h15m12s307.png