Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே....திரு அருட்பா..சுவாமி சரவணானந்தா அவர்களின் சுருக்கமான விளக்கவுரை.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
   அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
   அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
   அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே
   அன்புரு வாம்பர சிவமே......                                தனித் திருத் தொடை
                                                                              பரசிவ வணக்கம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

     அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுளே ‘அன்பு’ என்னும், பரமசிவம் என்று அறியலாகும். பேரருட் பெருங்கடவுள், நம் ஆன்ம சிற்றுருவில் அனுபவப்படும் உண்மைதான் இதில் பலவாகக் கூறப்பட்டுள்ளது. அன்பு தமிழ் எழுத்துக்களில் கடவுள் உண்மை வெளியீடு இச்சொல்லாய் அமைந்துள்ளது. அடிமுடி தொட்டிலங்கும் கடவுள், நம் தலை நடுப் பகரமெய் வடிவில் உகர அருள் ஐந்தியல் செயலோடு விளங்கி ஆனந்த வாழ்வு அருள்வதாம்.
20150405_082857.jpg

20150405_082857.jpg