Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இராமலிங்கர் வாழ்க்கை உண்மை..நூலிலிருந்து..
இராமலிங்கர் வாழ்க்கை உண்மை.
சுவாமி சரவணானந்தா.

0000000000000000000000000000000000000000000000

உருவ வழிபாடு ஆரம்பத்தில் தேவை.

00000000000000000000000000000000000000000000000

     உருவம் வைத்து வணங்குதல் அபக்குவர்க்கே பொருண்டும். சுத்த சன்மார்க்கத்து உத்தமர்கள், இந்தப் புற வணக்க வழிபாட்டைப் பற்றிநிற்க மாட்டார்கள். ஓரளவு, மனோ ஓர்மைக்கும், சித்த சுத்திச் செயலுக்கும் ஒரு புறத் துணைக் கருவியாகத்தான், திருவுருவங்கள் முதலியனவும், தீபஜோதி முதலியனவும், பிற சின்னங்களும் கொள்ளக்கூடும். ஆகையால், உருவ வழிபாடு தொடக்க காலத்தில் உதவுமே அல்லாது சதா காலத்துக்கும் உதவாதாம்.

     ஆனால், முதலிலேயே, உருவ வழிபாட்டை அலட்சியப் படுத்திவிட்டு அருவ நிலை வழிபாட்டில் இறங்கி விடக்கூடாது. அது பொருந்தாது. முழுப் பயனும் வழங்காது, அப்படி அருவ வழிபாட்டையே வற்புறுத்திக் கூறும் சில பிற்கால மதக் கொள்கைகள், அருள் ஒளி விளக்கம் இல்லாதனவேயாம்.
IMG_20170102_200524.jpg

IMG_20170102_200524.jpg