Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.671


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.


அறுபத்தெட்டாம் அதிகாரம்.


உபவாசம்.



1

உள்ளொளியோ டுற்று உபவசித்தல் வேண்டுமிங்கு

தள்ளுக பொய்விரதம் தாழ்வு.

671


குறள் விளக்கம்


அருளமுதாம் மருந்து அகத்தே இருக்கக் கண்டு கொள்ள நேர்ந்தது முன் அதிகாரத்தில். ஆதலின் அதற்கடுத்து, அம்மருந்துண்டு அகத்தே உபவாசம் செய்தல் வேண்டும் என்ற கருத்தை உணர்த்தவே இந்த உபவாசம் என்னும் அதிகாரம் அடுத்து வைக்கப்பட்டுள்ளது.


ஆன்ம நிலையோர்ந்து அதில் ஒன்றி அவ்வான்ம இயற்கையாகிய தயவு பெருகப் பெருக வாழ்வதே ‘உப’ வாகிய நிலையில் வசித்தலாகும். இப்படி அக உணர்வு கெடாது வாழற்கு, புற வாழ்வில், உணவேற்பதில், இச்சையின்றி, கூடக் குறைவின்றி பொறிபுலன் மயங்காது வெம்பாது பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஈதன்றி, ஒரு வேளையோ, பல பொழுதோ, முற்றும் உண்ணாது இருப்பதாலும், புற கட்டுப்பாட்டு விதிமுறை வழுவாது விரதம் இருப்பதாலும் உயர்வில்லையாம்.

P Sujatha
உண்மையான உபவாசம் என்பது தயவோடு வாழுவது.உணவை இச்சை இல்லாமல் உணவை பசி தேவைக்கு உண்ணலாம்.அதற்காக நாள் முழுவதுமோ, பாதி நேரமோ உண்ணாமல் இருந்து ஆனால் தயவு இல்லாமல் இருந்தால் அது விரதம் இல்லை.தயவு வாழ்வு வாழுவதே உண்மையான உபவாசம்.உலகியல் மக்கள் கொள்ளும் சமய பற்று உபவாசங்கள் உண்மையான உபவாசம் இல்லை.திருமூலர் திருமந்திரத்தில் சொல்லுவார்.சன்மார்க்க உண்மையாளர்களுக்கு விரதங்கள் தேவை இல்லை என்றும்,அவர்கள் இருக்கும் உயர் சன்மார்க்கமே ஒரு விரதம் தான் என சொல்லி உள்ளார்.தயவு.
Sunday, February 6, 2011 at 02:42 am by P Sujatha