Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.644.


தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.



அறுபத்தைந்தாம் அதிகாரம்.


பெண்ணாசை விலக்கு



4.

உண்ணினே தீங்குசெயு மூர்மது பெண்ணாசை

எண்ணினே யுள்ளுருக்கு மிங்கு.

644


குறள் விளக்கம்


நாட்டிலே உள்ள மது வகைகளை உண்ணுவதால் மட்டுமே கேடு செய்யும். பெண்ணாசை என்னும் புல போகத் திச்சையோ, மனதினால் ஊன்றி நினைத்தாலும் கூட உண்ணின்று உடலையும் உயிரையும் உருக்கி வாட்டும். ஆதலின், இவ்வாசை மனத்தின் கண்ணும் விளைவு கொள்ளாது சிந்தனையும், செயலும் தயை வளர் பணிக்கே செலுத்திடல் வேண்டும்.