Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.628

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

அறுபத்து மூன்றாம் அதிகாரம்.

உலகந் துறவாமை.


8

நிலையகத் தொன்றி நிகழ்த்துல இன்பு

புலையகப் பற்றைப் புதைத்து.

628

குறள் விளக்கம்

சுத்த தேகம் பெறுவதற்கு, உள்ள அசுத்த தேகத்தை இழிவெனத் துறத்தல் கூடாது. இத்தேகம், நாம் என்ற உணர்வை நீக்கி, ஆன்ம நிலையத்தினின்று தயவால் மலர்ந்து வாழல் வேண்டும். நித்திய சுத்த ஆன்ம சோதியே நம் தேக வடிவாகவும் அத்தேகத்தின் எல்லாச் செயலாகவும் பெறுவதுவே, புன்புலால் ஆக்கையே பொன்பொலி வடிவாம் மாற்றப் பெறும் உபாயமாகும். அகமிருந்து அன்பாலே இன்பு செய்தால் வாழ்வும் சுத்த இன்பமாகச் சூழும்.