Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.614

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

அறுபத்திரண்டாம் அதிகாரம்.

பணிவு.

4.

பணியும் பணியே பணியா யணியில்

தணியுந் தனிதாத் தருக்கு.

614.

குறள் விளக்கம்

அகங்காரம், கர்வம், பெருமிதம் என்னும் பொருளைக் கொண்ட தருக்கு ஒழிவதற்குத் தயவோடு கூடிய பணிவுதான் உள்ளும் புறமும் செயல்படல் வேண்டும்.

ஆகையினால் தாழ்ந்து தொண்டு செய்யும் வேலையே நமது ஆபரணமாகத் தரித்துக் கொண்டு வாழ்தல் வேண்டும். எனவே தயவுப் பணியால் பணிடும். அப்பணிவால் தணிவும், அத்தணிவில் தயவுத் திருவடியை முடியில் அணிதலும் அதனால் பேரின்பமும் சித்திக்கும்.