Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.589.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தொன்பதாம் அதிகாரம்.

தயா இன்பம்.


9.

தயானந்த உள்ளத் தளியிருந் தீண்டு

செயானின்ற வாழ்வே திரு.

589


குறள் விளக்கம்


இவ்வுலக வாழ்க்கை உண்மை இன்ப வாழ்க்கையாக வேண்டுமானால், இந்திரிய கரணங்களைக் கடந்த சீவ உணர்வில் தயவு நெகிழ்ச்சி பெருகச் செயல் புரிந்து கொண்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் உண்மலரும் தயா அம்பல வாழ்வே உலகில் அருளாகிய திருவை ஈட்டும் முறையாகும். இவ்வருட் செல்வம் ஒன்றே பேரின்ப வாழ்வுக்குப் பயன் படுவது. பொருட் செல்வம் படைத்தவர்கள் துய்க்கின்ற இன்பமெல்லாம் புலன் அளவில் தோன்றிக் கெடுவனவாம்.