தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தேழாம் அதிகாரம்
ஞாபக விசாரம்.
|
6 |
மவுன மகஜோதி வள்ளலொளி கண்டு தவுதலில் ஞாபகம் தாங்கு. |
566 |
குறள் விளக்கம்
அகம் என்பது ஆன்மாவாம். இதில் தயாபெரும் கடவுள் ஜோதி பிரிவுறக் கலந்துள்ளதை உணர்த்த ‘மகம்’ என்று கொள்ளலாகும். அதாவது ‘ம்’ என்னும் மகரமெய்யே கடவுட் ஜோதியாய் அகத்தே பொருந்தியுள்ளதாம். இவ்வான்ம ஜோதியைப் பூரணமாய் நிரம்பச் செய்கின்ற, ஞான பக்தி – கருமம் கூடிய யோகமே தவுதலில்லாத (குறைவில்லாத) ஞாபகம் ஆகும்.
இவ்வான்ம யோகமே, மந்திர யோகமென்றும், மகா யோகமென்றும். ராஜயோகமென்றும் மொழியப்படும். இந்நால்வகை யோகமும் ஒன்று பட்டு குன்றாது ஒளி வீசுகின்ற ஞாபகம் தான் யாவரும் தாங்க வேண்டும்.
Write a comment