தினம் ஒரு தயவுக்குறள் எண்.547.
posted 18 months ago
25 Jul 2010 03:11:08 GMT 3:11:08 AM
1568 views
தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தைந்தாம் அதிகாரம்.
விசாரமும் சூழ்நிலையும்.
7 |
அருளுருவு மைஞ்செயலும் ஆண்டவர் கொண்டென்றும் திருநடஞ் செய்தற் றெளி. |
547 |
குறள் விளக்கம்.
அருட்ஜோதியே தனது வடிவாய்க் கொண்டு, ஐந்தொழிலே தனது செயலாய்க் கொண்டு விளங்குபவர் நம் பதி. இந்த உண்மையைக் கண்டு கொள்ள சத்விசாரமும், அப்பதியின் அருளைப் பெற்று உலகோடு ஒத்து வாழற்கான சுத்த தயவும் நாம் கொண்டு உய்யவே நம் தயா ஜோதி பதியின் திருநடனம் விளங்குகின்றதாம்.