Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.432

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி நான்காம் அதிகாரம்.

பிறவித் தொடர்.

2

நலஞ்செய்வார்க் குண்டாம் நவையில் மனித

குலஞ்சேர் பிறப்பெனக் கூறு.

432

குறள் விளக்கம்.

அன்பும் அறிவும் விளங்கும் மனிதப் பிறவி சிறந்தது. இப்பிறவியில் இந்த அன்பையும் அறிவையும் பயன்படுத்தி நல்ல செயல் புரிந்து கொண்டு, இம்மையில் செம்மையாய் வாழ்ந்தால், மறுமையிலும் இவ்வாழ்வே தொடர நல்ல மனிதப் பிறப்பே உண்டாகின்றது. அப்படி நல்வாழ்வு வாழாதார் மறுமையில் உயர் பிறப்படைதல் கூடாது.