Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.400.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பதாம் அதிகாரம்.

பரமான்மா.

10.

பரம்பொரு ளுண்மை பரருமிங் கேற்கத்

தரும்பெருஞ் சுத்த தயவு..

400.

குறள் விளக்கம்.

சுத்த தயா மார்க்கமாகிய இந்நெறி உலகுக்குப் பரம்பொருளின் உண்மையை யாவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க முறையில் உள்ளவாறு உணர்த்த வருகின்றது. அன்போடு ஏற்று வாழ்பவர்கள், தங்கள் தங்கள் உயிருக்கு உயிரான பரமான்மனை தேவ தேவனை கண்டடைந்து பெரிய இன்பத்தைப் பெறுவார்களாக.