Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.395

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.

5.`
பாவகத்தா லெய்தப் படுமோ பரமான்மா
மேவகத்தே நின்றருளான் வேண்டு.
395.

குறள் விளக்கம்.
இத்தேகம் நான் அல்ல, இதற்குள் இருக்கும் தேகி ஆகிய பிரம்மம் நான் என்று பிறர் மூலம் கேட்ட விடய ஞானத்தாலும், கற்றறிந்த கலை ஞானத்தாலும், எல்லாம், அப்பிரம்ம பாவனை செய்து வந்தால் அதனை அடைந்து விட முடியுமோ ? முடியாது.
அக உண்மையை சத்விசாரத்தால் கண்டு பொருந்தி, இடைவிடாது அருள் உணர்வு பெருக பெருக வேண்டிக் கொண்டிருந்தால், அவ்வருள் வெளிப்பட்டு கடமாகிய தேக நிலைப் பற்றற்று கடவுள் அனுபவம் சித்திக்கும், இதுவே சுத்த சன்மார்க்கம் வழங்கும் பரமான்ம சித்தியாம்.