Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.327.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

7.
திணைவழி யெவ்வுயிர்க்குழு செந்தண்மை கொள்ளில்
வினைபழி மேவா விடக்கு.
327.

குறள் விளக்கம்.
சர்வ சீவதயா ஒழுக்க நெறி மேற்கொண்டு வாழும் நல்லோரை, நல்வினை தீவினையால் வரும் சுக துக்கங்களும், உலகவர் அறியாது கூறும் பழி பாவங்களும், புலை உடம்பின் பந்தமும் சாரா.
திருவருளாலே உள் மலர்ந்த செம்பொருட் சோதியே
தன்னைச் சூழப்பெற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை ஆகிய தயவு செய்து கொண்டு விளங்குவான் இச்சன்மார்க்கத்தில் ஒழுகுபவன்.
விடக்கு = புலையுடம்பு.