தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.
| 8. | மதிச்சோதி மானு மறிமன மேற்கும்
பதிச்சோதி பார்க்கும் பகல். |
288. |
குறள் விளக்கம்.
பதிச்சோதி பார்க்கும் பகல் = கடவுட் சோதியானது புறத்தே காண்கின்ற ஞாயிறு ஓன்று உள்ளதாம். அதன் ஒளியை ஏற்று வளர்வதும், தேய்வதுமாய் உள்ள திங்கள் போன்றதே நிலை பெறாத மனம். ஆகையால், சூரியனை (மெய்) அறிவாகவும், சந்திரனை அலை மனமாகவும் உருவகம் செய்தல் பொருத்தமே.
மானும் = ஒப்பாகும்.
மறி = ஆடு, மான், தடை, இடர்பாடு, இந்தப் பொருள்களுக்கு எல்லாம் மனத்தின் இயல் ஒத்தனவே.
Write a comment