Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.261.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
மனவொறுப்பு

1
புலனெறியிற் பாய்ந்தோடு புன்மனத்தை மேன்மேல்
நலமுற மன்னொறுத்தல் நன்று.
261.

குறள் விளக்கம்.
சுத்த தயவினால் மன அமைதியுற்று ஆனந்த அனுபவம் உற வேண்டி முன்னதிகாரம் கூறப்பட்டது. அம்மனம் அமைதியுறாது அபக்குவத்தால் அடிக்கடி சலனப்படும்போது அதனை வைது, திருத்தி அடக்கியாளவே இவ்வதிகாரம் தொடரப் பெறுகின்றதாம்.
ஒறுப்பு = கடிதல், கோபித்தல் முதலான செயல்.
புலனின்பத்தை நாடி அடிக்கடி ஓடி அலையும் மனம் புன்மையுடையதாம். அதாவது அற்பத் தன்மையுடையதாம். அப்படி உழலாது நின்று நலமடையவே அப்படி அதனைக் கடிந்து இடித்துக் கூறி நல்வழிப்படுத்தி நன்னிலையுறச் செய்தல் வேண்டும்.
மன் = மிக.