தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.
|
3.
|
பொறிவாயி லைந்தின் புணர்ந்துள் மயங்கி
வெறியயர்தல் இன்போ விளம்பு
|
243.
|
குறள் விளக்கம்.
புலனிச்சை கொண்டு ஐம்பொறி வாயில் நுகரும் இன்பானுபவம் அக உண்மையை மறைத்துப் பின்னர் தளர்ச்சியும் கேடும் விளைவிக்கும். ஆதலின். அந்த இன்பம் இன்பமா ? சிற்றின்பமா ? பொய் இன்பமா ? அன்றி துன்பமா ?
பொறிவாயில் யாரும் மயங்கித் துய்க்கின்ற இன்பானுபவம் எல்லாம் உண்மையல்ல. வெறி கொண்ட ஆட்டமேயாம். ஆதலின், இந்நிலையை உவகை மெய்ப்பாட்டின் பயன் எனக் கருதிப் பற்றுதல் கூடாதாம்.
பொறிவாயில் ஐந்தின் பொய்தீர் ஒழுக்கமாகிய தயாநெறியினின்று சுத்த இன்பானுபவத்தை அடைவதே உண்மை உவகை.
Write a comment