ஞான சரியை
முதல் 1-14 பாடல்களுக்கு திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் எழுதிய உரை விளக்கம் ஏற்கனவே 15.8.2008 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 15-28 பாடல்களுக்கு சுவாமிகள் எழுதிய உரை விளக்கம் தற்போது வெளியிடப்படுகிறது.
உரை விளக்கம் (15-28 பாடல்களுக்கு)
15. பாடல்
சத்தியவே தாந்தமெலாம்
சித்தாந்த மெல்லாம்
தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும்
தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே
நிறைந்துநடம் புரியும்
நித்தபரி பூரணனைச்
சித்தசிகா மணியை
அத்தகையோர் பெரும்பதியை
அருமருந்தை அடியேன்
ஆவியையென் ஆவியிலே
அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த
சிவகதியை உலகீர்
சிந்தைசெய்து வாழ்த்துமினோ
நிந்தையெலாம் தவிர்ந்தே
சிற்சபை ஒன்றே நமது ஆண்டவர்க்கு, உண்மையான, என்றென்றும் விளங்குகின்ற கோயிலாய் இருக்கின்றதாம்.
இவ்வம்பலத்தின் நடுவிலே இருந்து கொண்டு, எங்கும் நிரம்பிய தன்னிலை காட்டும், தனிப்பெரு நடனம் புரிந்து கொண்டுள்ளளைர். அவர் நித்த பரிபூரணராக உள்ளளைராம். நித்தியராகவும், நிறைவுடையவராகவும் இருக்கின்றவர் ஒருவரே.
“ஒருவர் தான் என்பது அந்த அருள்
அம்பலத்திலிருந்து, அருளளைலே
காண்கின்ற போது தான் உண்மையாக
விளங்கும்”
மற்றபடி சொல்லித் தெரிந்து கொள்ள முடியாதாம்.
அவர், சித்த சிகாமணி ஆவார். அவர், அற்புத சித்தர்களுக்கு எல்லாம், தனித் தலைமைப் பெரும்பதி என்பது குறிப்பு. அன்றியும், சித்தம் என்பது சலனமற்ற மனத்தின் தெளிவு நிலையாக இருக்கின்றதால், அத்தெளிவோடு நிலைத்துத் திருவருளை வேண்டி நின்றால் முடிவில் அருட்ஜோதிமணியாய் நமது ஆண்டவர் வெளிப்படுகின்றார். ஆதலின், இந்த அருùளளைளி மணியைச் சுத்த சிகாமணி என்று கூறலாம்.
அன்றியும், நல்ல யோகியரிடத்தில் விளைவு கொள்ளுகின்ற சித்த நாடியின் அந்தத்தில், தேஜோ மயமாய் வெளிப்படுகின்ற சிவஜோதிமணியே சித்த சிகாமணியென உள்ளதாம். இந்த மணியை அனுபவத்தில் பெற்றுக் கொள்கின்றவர்கள், யோக ஞான சித்திகள் பலவும் புரிவார்கள் என்ப, இந்த சித்த சிகாமணியையுற்று சித்தர்களுக்கெல்லாம் சிகாமணியாய் விளங்குகின்ற பலரும் போற்றும்படியாய் விளங்குகின்ற பெருமை உடையவர், நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இந்த பதியை, சத்தியமாயுள்ள வேத வேதாந்தங்கள், சித்தாந்தங்கள் எல்லாம் விளக்கிக் கூறி, சுட்டிக் காட்ட எவ்வளவோ காலமாக முயன்று கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் எல்லாம் தன்னைச் சிறிதும் வழங்கிடவில்லை. நமது அருட்பெரும்பதி. வேதாந்தமும், சித்தாந்தமும் மனிதனைப் பகுத்தறிவின் எல்லையில் நிறுத்திப் பாவனை செய்ய விட்டு விட்டுத் தயங்கி நிற்கின்றன.
அதற்கு மேல் அவற்றால் என்ன செய்ய முடியும்! அந்தப் பாவனா சமாதிப் பழக்கத்தாலும் ஆகம தந்திர முறைகளளைலும், நித்த பரம்பொருளை ஓரளவு உணர்ந்து அடைந்து, ஓரளவு சித்தி கொண்டும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் வாழ்ந்தொழிய முடிந்ததாம்.
அருட் பூரணம் என்னும் சுத்த சன்மார்க்கம் ஒன்றினால் தான் நிலையான நித்தியானந்த வாழ்வு பெற முடியும் என இந்நாள் திருவருளளைல் உணர்த்தப்படுகின்றோம். அப்பேர்ப்பட்ட அருட்பெரும் பதியை, அருமருந்தாய், அருள் அமுதமாக உள்ள ஒன்றையே, என்னுடைய உயிராகக் கொண்டுள்ளதாய்த் திருவருளளைல் அறிவிக்கப்படுகின்றனன்.
மேலும் எனது ஆன்மாவாயிருக்கும் அது எல்லாம், வல்ல தயாநிதியாகவும் இருக்கக் காண்கின்றேன். அதுவே என்றன் தயா ஜோதி நிதியாய் விளங்கி, சித்தி எல்லாம் வழங்குகின்ற சிவநிலையாகவும் கண்டு கொள்கின்றேன்.
நீங்களும் இந்த பதி அருளைப் பெற்று, பரமானந்த வாழ்வு அடைந்திடலாம் வாருங்கள். உலகில் பிறரை நிந்தித்தலை விட்டுவிடுங்கள், எங்கும் விளங்கும் இறைவனையும் அவனது அருட்சக்திச் செயலையும் கண்டு கண்டு வந்தனையே புரியுங்கள்.
“முதலில் அம்பல முன் வந்து நின்று ஆண்டவர் பெருமையை நினைவு கூறுங்கள், சிந்தனை செய்யுங்கள், செய்து கொண்டேயிருங்கள். அன்பினால் கன்மனம் கரைந்து நெகிழும்போது, ஆண்டவர் உண்மை வெளிப்படுவது சத்தியம்.”
வேதாகமங்களளைலும், காண்டற்கும் கண்டு காட்டற்கும், அரிதாகிய கருணை வள்ளலை அருட் கண்ணாரக் கண்டு கொள்வீர்கள். கண்டு, உள்ளூறக் கொண்டு வாழ்விலே அமைத்துக் கொண்டு சச்சிதானந்தமாய்த் திகழலாம்.
சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பார்கள். எப்படியிருக்க முடியும்?
“வெறுஞ்சிந்தனை செய்து கொண்டிருந்தால் அருட் செயல் புரிய முடியாதுபோம். கடவுள், இடையறாது ஐந்தொழில் புரிந்து கொண்டேயிருப்பவரவார், “அவரை உளத்திற் கொண்டு மறவாது இருப்பதோடு, ஜீவ கருணைச் செயலும் புரிந்து கொண்டே இருப்பதுதான், உடல் உயிரோடு விளங்குவதற்கும் உணர்வில் கடவுட் சிந்தனை ஓங்குவதற்கும் உற்ற உபாயமாகும்.
ஆகையால், சித்தத்தில் செம்பொருட் சிந்தனை மாறாதிருக்க வேண்டும் என்றால் சுத்த சத்விசாரத்தால் அக நிலையிற் பிறழாதிருந்து கொண்டு, அருட் செயலில் ஈடுபட்டுவிட்டால் திருவருள் தடைபடாது அனகத்தே பெருகிக் கொண்டேயிருக்கும்.
அப்போதுதான் சிந்தித்து இருக்கவும், அபாயம் ஏதும் உண்டாகாது வாழ்ந்திடவும், இன்பிலே என்றென்றும் விளங்கிடவும் கூடும்.
சிவகதி என்றது அருள் அல்லது தயா உண்மையைக் கொண்டதேயாம். கடவுள் தயவே நமக்கு ஜீவ தயவாய் விளங்கி, சுத்த தயா இன்ப நிலைக்கு ஏற்றி வைக்கவுள்ளதாம்.
கதி என்றால், வழி, புகலிடம், நிலை துணை முதலியனவாகப் பொருள்படம். இவை யாவுமாய் இருப்பது கடவுள் தயவு ஒன்றே. ஆதலின் சிவகதியைத் தயா கதியாகக் கொள்ளுதல் பொருந்துவதே.
அன்றியும், தயா இன்ப நிலை பேறே, எவரும் தயங்காது ஏற்கக் கூடிய ஒன்றாய் இருத்தலின், சைவ சமய மதம் குறிக்காத இச் சச்சிதானந்த தயவை ஏற்போமாக.
16. பாடல்
நிந்தையிலார் நெஞ்சகத்தே
நிறைந்த பெரும்தகையை
நிலையனைத்தும் காட்டியருள்
நிலையளித்த குருவை
எந்தையையென் தனித்தாயை
என்னிருகண் மணியை
என்னுயிரை என்னுணர்வை
என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும்
தெள்ளமுதை அனைத்தும்
செய்யவல்ல தனித்தலைமைச்
சிவபதியை உலகீர்
முந்தைமல இருட்டொழிய
முன்னுமினோ கரண
முடுக்கொழித்துக் கடைமரண
நடுக்கொழித்து முயன்றே.
அன்பு முந்து சித்தையே ஆலயங்கொள் ஆண்டவர், நிந்தையிலா நெஞ்சகத்தில் நிறைந்த பெருந்தகையே ஆவார். அவரே உண்மைக் குருவாய் உள்ளத்தவிசில் எழுந்தருளி உபதேசஞ் செய்து, கண்டு கொள்ள வேண்டியதை எல்லாம் காட்டி, மேனிலையில் கூட்டி வைக்கின்றார்.
அவரே எனக்கு உண்மைத் தந்தை ஆவார். அவரே எனக்கு ஒப்பற்ற தாயும் ஆவார். அவரே எனது இரண்டு கண்ணினுண் மணியாய் இருந்து, யாவையும் கண்டு கொள்ளச் செய்கின்றார்.
மேலும், “அவரே எனது, உயிராகவும், அவ்வுயிரில் விளைகின்ற மெய்யுணர்வாகவும், அவ்வுணர்வால் பெறப்படுகின்ற அறிவாகவும், அவ்வறிவுக்கான அருள் ஒளியாகவும் இருக்கின்றார்”.
அவ்வருள் நிறையுணர்வை ஓர் சிந்தைக் கடலாகிக், அதினின்று கடைந்தெடுக்கப்பட்ட தெள்ளமுதாகவும் விளங்குகின்றார். அவ்வமுதம் ஒப்பற்ற அருட்சுவையை ஊட்டுகின்றது, எனது சித்தத்திலே. அந்த அருட்ஜோதி வண்ண அமுத மயமான பதியே எல்லாம் செய்ய வல்ல தனித்தலைமைச் சிறப்பாக சிவபதியாக, யான் கண்டு கொண்டுள்úளன்.
சிவம் என்றாலே நின்மலமானதாம். அச்சிவபதியே சுத்த நிலையில், தன் அருளையே சூழக்கொண்டுள்ளளைர். அந்த அருள் உண்மை அபக்குவத்தில் விளங்குவதில்லை. மருளளைக. இருளளைக மாற்ற தோற்றத்தோடு காணப்படுகின்றதாம். மலபாசச் சார்புடைய பசுவாக தோற்றுகின்ற ஜீவன், உண்மையில் அருùளளைளி சூழ் சிவமே என்பது சுத்த நிலை அனுபவம்.
மருளளைகிய மயக்க நிலையை விட்டு, அருள் முயற்சியில் இருங்கள். மனோகரணம் என்னும் இருண்ட ஒரு மூலையிலே முடுக்கப்பட்டு, முடங்கிக் கிடக்கின்றவர்கúள, அருளை முன்னுங்கள் (கருதி எழுந்து முன் வாருங்கள்). அப்படி உள்விழித்து எழுதலாலே, கரணமுடுக்கு ஒழியும், கேவலாதிகார மரணமும் நீங்கும்.
கேவலம் என்பது மறதி. அதற்கு எதிர்ச்சொல் சகலம்; நினைப்பு என்று பொருள்படும். அருட்ஜோதிபதி ஒன்றே உண்மையில் இருக்கின்றது என்றதை சுத்த சத்விசாரத்தால் தான் கண்டு கொள்ள முடியும் என்று அறிந்து கொண்டுள்úளளைம், இந்த உண்மையை மறத்தல் கேவலம். மறந்து நாம் என்றும் பிறர் என்றும் உலகை நோக்குதல் சகலம். உண்மையை உள்ளபடி அறிந்து, அதனை மறவாது நினையாது நிற்றல் சுத்த நிலையாம். இந்நிலையே கேவலதிகார மரணமற்ற நிலையாம்.
இந்நிலையை, முதலில் சத்விசாரத்தால் கண்டு நிற்க வேண்டும். இதுவே இராப்பகலற்ற, பிறப்பு இறப்பு அற்ற இடமாம், இதிலிருந்து கொண்டு அனக தயா நிறைவு பெறும் போது, தேகமும் சுத்த நிலை பெற்று மரணமில்லாப் பெரு வாழ்வு சித்திப்பதாம். இதுவே சுத்த சன்மார்க்க சாத்தியானுபவமாம்.
அருட்குருவை அடைந்தால் தான் அருள் நிலை அனுபவம் ஆகிய இறவாப் பேரின்ப வாழ்வு சித்திக்கும் இந்த அருட்குருவை புறஉலகில் எங்கும் கண்டு கொள்ள முடியாதாம் குருவென்றாலே அறியாமையைப் போக்கி, அறிவு உண்மையைக் காட்டுகின்றவர் என்றே பொருள்படும்.
அப்படிச் செய்கின்றவர்கள் உலகில் பலராக இருக்கின்றார்கள் என்பது உலகியலார் கருத்து. அது ஓரளவு உண்மைதான். அந்த உலக குருக்களளைல் சில பல உண்மைகளை அறிந்து கொள்கின்றதும் மெய்தான். ஆதலால், அன்னவர்பால் அன்புப் பணிவுடனிருந்து அறிவு விளக்கம் பெறுதலும் நன்றே.
ஆனாலும், அவர்கள் ஓர் எல்லை வரைதான் பிறரை ஏற்றி விட முடியும். அதற்கு மேல் விசார ஞானத்தால் அகவுலகில் அருட் ஜோதியாம் குருவைக் கண்டு கொள்வோமெனில் ஏறாத நிலை மிசை ஏறி, மரணமிலாப் பெருநிலையில் திகழலாம். இந்த அருட்ஜோதி கருவே எல்லோருக்கும் உண்மைக்குரு. என்றும் உடனிருந்து காண்பரியன எல்லசம் காட்டியும், பெறற்கரியன எல்லாம் பெறுவித்து விளங்கிடச் செய்வார்.
இவ்வண்ணம் பிற எந்தக் குருவால் செய்ய முடியும்? இந்த குருவையே ஒவ்வொருவரும் தம் சொந்த குருவாகக் கண்டு, அடைந்துவிட்டால், அவரே நிலையனைத்தும் காட்டி அருணிலை அளிப்பார். அந்நிலையே சுத்த சுகானந்த நித்திய பூரண நிலையாகும்.
17. பாடல்
முயன்றுலகில் பயனடையா
மூடமத மனைத்தும்
முடுகிஅழிந் திடவுமொரு
மோசமும்இல் லாதே
இயன்றவொரு சன்மார்க்கம்
எங்கும்நிலை பெறவும்
எம்மிறைவன் எழுந்தருளல்
இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல்
இறந்தவர்கள் எல்லாம்
தோன்றஎழு கின்றதிது
தொடங்கிநிகழ்ந் திடுநீர்
பயின்றறிய விரைந்துவம்மின்
படியாத படிப்பைப்
படித்திடலாம் உணர்ந்திடலாம்
பற்றிடலாம் சுகமே.
மதம் என்பதன் உண்மைக் கருத்தை உள்ளவாறு தெரிந்து கொண்டால், எல்லோருக்கும் நல்லதாம்.
மதி என்றது, சந்திரன், அறிவு என இரு பொருள்படும். வானொளிர் சந்திர சக்தியால் உலகப் பொருள்களில், உயிர்களில் அமுத சத்துக்கள் விளைவு கொள்கின்றன. இந்த சத்துக்கúள அகப்புற விளக்கத்திற்கும் இனவிருத்திகளுக்கும் உதவுகின்றனவாம்.
இவ்வாறாக, மனிதனில் இவை, மதமும் மதியுமாய் விளைந்து பெருகுகின்றனவாம். உடலில் விளை மதசத்து இனவிருத்திக்கும், உயிரில் விளை மதசத்து, மதி என்னும் அறிவுவிளக்கம் செய்வதற்கும் என்று அறிவோம்.
ஆகவே “ஆன்ம சத்தென்னும் மெய்யறிவு தான் உண்மை மதமாக உள்ளதாம்”. ஆனால், அந்த மெய்யறிவு ஆன்ம அறிவாக மட்டும் இதுவரை இருந்து வந்ததால் அந்த ஆன்மக் காட்சியில் கண்ட பலப் பலவாகிய கற்பனா விளக்க மதங்கள், சமயங்கள் மலிந்துவிட்டன.
ஆன்மாவின் உள்ளிருந்த அருட் பெரும் சக்தி வெளிப்படாது இருந்த காரணத்தால், மூடுண்டு பொய்மையே புறந்திகழ்ந்து கொண்டு இருந்ததால், அருள் விளக்கமாம் உண்மை மதம் வெளிப்படாதிருந்ததாம்.
பேரறிவாளர்களளைல், பெருந்தவ முயற்சிகளளைல் கண்டு உரைக்கப்பட்ட மதங்கள் யாவும் மூட மதங்கúளயாம். அதாவது, கடவுள் உண்மை மூடுண்டு, மறைபட்டுக் கிடந்த கருத்துக் குவியல்கúள, மூடமதக் கொள்கைகள் என கூறப்படுகின்றன.
அந்த மூட மதங்களளைல் உலகிற்கு மெய்ப்பயன் உண்டாகவில்லை. அவற்றைக் கொண்டு எவ்வளவோ பாடுபட்டும் முடிவில் பெரும் பயனின்றிக் கெடவே கண்டோம். பழையனவற்றை மூடமுண்டதாகக் கூறினதால், அவற்றை அவமதித்ததாகக் கொள்ளக் கூடாது.
அந்தக் காலத்தில் கடவுளளைன்மா அணுத்துவமாய்த் தன் சக்தியைக் கை மண்ணளவு வெளியில் காட்டி உலகளவை உள் மறைத்து வைத்துக் கொண்டிருந்தது. அங்ஙனம் வெளிப்பட்டிருந்த சிறிதளவு ஆன்ம சக்தியால் இயற்றப் பெற்ற அற்புதங்களும், மதங்களும் மன்பதையை ஓளவு ஆட்கொண்டிருந்தன.
அவற்றால் நேர்ந்துள்ள பயன், இன்றைய கலக்கம் நிறை உலக நிலையேயாம். இப்பொழுது ஆன்மா அணுத்துவ நிலையினின்று அருட் பூரணத்தால் மலர்ந்து அருளமுத சாரத்தை வழங்குகின்றதாம். இதுவே சுத்த சன்மார்க்கம் என்னும் உண்மை மதமாகி உலவாப் பேரின்பம் நல்க உள்ளதாம்.
ஆகவேதான், நம் பதி, அம்மூட மதங்கள் அனைத்தும் முடுகி அழிந்திட, விரைந்து ஒழிந்திட, சஙகற்பஞ் செய்து கொண்டுள்ளளைர். இத்தோடு, இயன்ற ஒரு சன்மார்க்கம், இயற்கை உண்மையாகவும், எவர்க்கும் பொருத்தமானதாகவும் இருக்கும், ஓர் ஒப்பற்ற சுத்த சன்மார்க்கத்தை எங்கும் தோன்றி நிலைபெறச் செய்ய வேண்டி இப்பொழுதே இங்கு எழுந்தருளுகின்றார். இது அதற்கு உற்ற தருணமாக அமைந்துள்ளது.
“இவ்விடத்தில், இது முதலாக, இறந்தவர்கள் எழுப்பப்படுவார்கள். அதாவது, இதுகாறும் செயலறக் கிடந்த ஆன்மாக்கள் அருùளளைளியோடு அகவுலகில் முதலில் எழுப்பப்படுவார்கள்.”
தூக்கத்திலிருந்து எழுந்தவன், தனது கனவுலகை விட்டு நனவுலகத்திற்கு வந்ததும், முன்னது பொய் என்று கண்டு கொள்கின்றான்; ஜாக்கிர உலகில் நல்ல வாழ்வை அனுபவிக்கின்றான்.
இதே போல, “ஆன்ம விழிப்படைந்து, அகவுலகில் எழுந்தவன் மாயா உலக நிலை கடந்து, அருட் ஜோதிமயக் காட்சியோடு ஆனந்தச் சூழலில் திகழக் காண்கின்றான்”.
இந்நிலை வாழ்வு அகமிருந்து மலர்ந்து நுகரப்படுவதால், இத்தருணமே வந்து சேரக் கடவீர்கள். இந்த அருள்மதம் வெற்றுப் படிப்பாலும், பாடம் பண்ணி விரிவுரை செய்து விடுவதாலும், புற வழிபாட்டு முறைகளளைலும் பயன் அளித்து விடாது.
சத்விசாரத்தால் உள் உணர்ந்து தயா ஒழுக்கத்தோடு இருந்தால்தான் அகத்தே வெளிப்படும். இப்படிச் செய்திருத்தல் தான், “பயின்றறிதல்” என ஈண்டு குறிக்கப்படுகின்றதாம். இப்பயின்ற அறிவால் தான், படியாத படிப்பைப் படித்திடலாம்; கல்லாத கல்வியைக் கற்றிடலாம். ஓதாதுணரலாம். உணர்ந்து, சுகநிலை பேற்றையும் அடைந்திடலாம், என்று உறுதி கூறப்படுகின்றது.
சுகம் - வாழ்க்கையின் அனுபவப் பயனே இதனைக் கற்று பெறுதல் கூடாது. ஒரு பொருளின் சுவையை உண்டு காணல் போன்று, சுகத்தை வாழ்ந்து அனுபவிப்பதே முறையாகும்.
18. பாடல்
சுகமறியீர் துன்பமொன்றே
துணிந்தறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர்
தூய்மையறிந் திலிரே
இகமறியீர் பரமறியீர்
என்னேநும் கருத்தீ(து)
என்புரிவீர் மரணம்வரில்
எங்குறுவீர் அந்தோ!
அகமறியீர் அனகமறிந்(து)
அழியாத ஞான
அமுதவடிவம் பெறலாம்
அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர்
என்னையறி யீரோ
முத்தரெலாம் போற்றுமருட்
சித்தர்மகன் நானே.
உண்மை அறிந்து, உயர் ஒழுக்கம் பூண்டு, நல்ல வாழ்வில் தழைத்துப் பேரின்பமுற வேண்டியது, ஒவ்வொருவருடைய கடமையாய் இருக்க, உண்மையைச் சிறிதும் அறிந்து கொள்ளளைமல் துன்ப வாழ்வில் தொல்லைபட்டுக் கொண்டு கிடத்தல் ஏனோ? என மிக உருக்கத்தோடு இரங்கிக் கூறுகின்றார் நம் வள்ளல் பெருமான்.
சுகம் - உண்மையான ஆன்ம சுகம், அதனினும் மிக்கதாய, ஒப்புயர்வற்ற அருட்பெருஞ்சுகம் என்பது யாது என்று தெரிந்துகொள்ளவும், தெரிந்து கொண்டு அடையவும் முயலுகின்றீர்களில்லை.
துன்பம் மட்டும் பட்டுக்கொண்டே இருக்கத் துணிந்து விட்டிருக்கின்றீர்கள் போலும். அறியாமையில் விளைகின்ற அற்பசுகம் கூட துன்பமாகத் தான் முடிகின்றது உங்களுக்கு.
அன்றியும் நீங்கள் நன்றாகச் சூதறிந்து கொண்டுள்ளீர்கள். அதாவது, பொய், ஏமாற்றுவித்தையில் தேர்ச்சி பெற்றிருக்கின்றீர்கள். வாதறிவீர்கள்; வம்பு வழக்காகிய வாதமும், வீண் விதண்டாவாதமும், கலைப்போட்டி விவாதமும் அறிந்திருக்கலாம். ஒரு வேளை யோக கர்ம வாதசித்தியால் உலகை மயங்கச் செய்ய வல்ல ஆற்றலைக் கூட பெற்றிருக்கலாம். இவற்றாலெல்லாம் கடவுளரின் தூய அருள் கிட்டுவதாய் இல்லையே!
அன்புப் பெருக்கால், ஆன்ம நெகிழ்ச்சியால், “உள்ளத் தூய்மை உண்டானால் தான்” அருùளளைளி கிடைக்கும். ஆதலின் அந்தத் தூய்மையை அறிந்திலீரே என்று, இரக்கப்படுகின்றார்.
மேலும் இகம் அறியீர் என்கின்றார் இகமாவது இவ்வுலக இயல்பும், வாழ்க்கை முறையும், இவைகளுக்கு ஆதரவாய் இருந்து, உதவுகின்ற கடவுட் செயலும் கொண்டதாம்.
இவ்வளவையும் உள்ளபடி அறிந்து கொண்டால் இம்மையில் எம்மையும் கண்டு இன்புறலாகும். இம்மை உண்மையை அறியாதபோது, இக ரகசியத்தைத் தெரிந்து கொள்ளளைதபோது, பரமாகிய மேல் நிலை உண்மையை, கடவுள் தத்துவ இரகசியத்தை எப்படிக் கண்டு கொள்ள முடியும்? ஆகையால் பரம் அறியீர் என்றும் குறிக்கின்றார்.
இங்ஙனம் அறியாமையிலே உழன்று கொண்டு கிடக்கும் உங்கள் கருத்துத்தான் யாதோ? உங்கள் எண்ணம் என்ன விபரீதமாய் இருக்கின்றது! என இரக்க வியப்பு எய்துகின்றார். பின்னர், மரணம் வரும் போது என்ன செய்யப் போகிறீர்கள்? பாதுகாப்புக்கு எங்கே போவீர்கள்? அந்தோ பரிதாபம், என பரிதவிக்கின்றார்.
நீங்கள் மரணத்தை எதிர்த்துப் போராடினாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அல்லது இன்முகத்தோடு வரவேற்றாலும் சரி, நீங்கள் பெறப்போவது தோல்வியே மரணமென்னும் எமதர