பேருபதேசம் ….வள்ளலார்
8. யோகிகள்
வனம்
மலை,
முழை
முதலியவற்றுக்குப்போய்
நூறு
ஆயிரம்
முதலிய வருட காலம் தவம் செய்து சுத்த உஷ்ணத்தை
உண்டு பண்ணிக்கொள்கின்றார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கின்றதைப் பார்க்கிலும்
தெய்வத்தை
தோத்திரம் செய்கின்றதிலும்
நினைக்கின்றதிலும்
இதைவிடக் கோடிப்பங்கு
பத்துக்கோடிப்பங்கு
அதிகமான உஷ்ணத்ஹ்டை உண்டு பண்ணிக்கொள்ளலாம். எவ்வாறு எனில்
9. ஒரு ஜாம நேரம்
மனத்தில்
இக விசாரம் இன்றி
பர விசாரிப்புகள்
ஆன்ம நெகிழ்ச்சியோடு
தெய்வத்தைச்
சிந்தித்துக் கொண்டாவது
அல்லது தோத்திரம் செய்துகொண்டாவது
இருந்தால், நாம் பெறவேண்டியதைப்
பெற்றுக்கொள்ளலாம்.
-பேரூபதேசம்., வள்ளலார்…….
Write a comment