DAEIOU - தயவு
5.10.2017 அன்று புதிய வடிவம் கொடுக்கப்பட்ட வள்ளலார் ஆப்...ஆண்டிராய்டு மொபைலில் எவ்வாறு பயன்படுத்துவது...?
    தற்பொழுதெல்லாம் எல்லோரும் ஆண்டிராய்டு வசதி உள்ள மொபைல் வைத்திருக்கின்றனர். வள்ளற் பெருமான் தந்த பொக்கிஷமான, திரு அருட்பா பாடல்களை எங்கு சென்றாலும் படிக்கலாம்..அதற்கு இந்த ஆண்ட்ராய்டு வசதி உள்ள மொபைல்கள் மிகவும் வசதியானவையாகும். அதனை விளக்கும் ஒரு வீடியோ..இங்கே..



இதனை உருவாக்கம் செய்து, செம்மைப்படுத்தி, அனைவரும் திரு அருட்பாவினையும் பெருமான் உரைநடைப் பகுதியில் சொல்லிச் சென்ற அறிவுரைகளை எல்லாம் படிக்க வேண்டும். கேட்க வேண்டும் என்றால், இந்த Vallalar ThiruArutpa என்ற அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து, அதன்மூலம் இதனைப் படித்துப் பயன்பெறலாம். இதனை உருவாக்கிய பெருமை அமெரிக்காவில் வாழும் சன்மார்க்க அன்பர் திரு செந்தில் மருதையப்பனையே சேரும். மேலும், ஆடியோ மூலம், பெருமானின் பெரும்பாலான விண்ணப்பங்கள்,,இன்ன பிறவற்றையும் பதிவு செய்து, அதனையும், இந்த வள்ளலார் ஆப் மூலம் ஆண்ட்ராய்டு மொபைலில் கேட்கும் வசதியை ஏற்படுத்திய பெருமை பெங்களூரில் பணி புரியும் விருத்தாசலத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் இளவல்..திரு ஆனந்த பாரதி மற்றும் அவரது நண்பர்களையே சேரும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளும், வள்ளற் பெருமானின் ஆசியும், அவ்விருவருக்கும் கிடைக்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பார்த்து, கேட்டு, ஏனைய அன்பர்களுக்கும் இதனைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கே வைக்கப்படுகின்றது.
1432741756728.jpg

1432741756728.jpg

IMG-20170527-WA0084.jpg

IMG-20170527-WA0084.jpg

2 Comments
Anandha Barathi
தங்களின் இன் முயற்சிக்கு நன்றி அய்யா, இது மிகவும் பயனுள்ளது.
Saturday, December 16, 2017 at 09:03 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
அனைவரும் பயன்படுத்தினர் என்றால், இலகுவாக, எங்கு சென்றாலும், திரு அருட்பா பதிகங்களை, சிரமமின்றிப் பாடலாம்..படிக்கலாம்..இன்புறலாம்..அதற்காகவேதான் திரு செந்தில் மருதையப்பன் அவர்கள், இந்த அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார். உலகின் எந்த நாட்டில் வசிக்கும் சன்மார்க்க அன்பரும், இதனைக் கண்ணுற்று, இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டப்படுகின்றது.
Saturday, December 16, 2017 at 10:54 am by Daeiou Daeiou.