DAEIOU - தயவு
5.10.2017, 6.10.2017 வடலூர்.சன்மார்க்க மாநாடு.சன்மார்க்க சேவை மைய அன்பர்கள்.உழைப்பு..
திருக்கோவிலூரில் வழக்குறைஞராகப் பணி புரியும் திரு ஜீவ.ஸ்ரீநிவாசன் ஐயா அவர்கள், வடலூரில், முக்கியமான விசேட நாட்களில், வருவோர் போவோருக்கு ஒத்துழை க்கவும், சுற்றுப் புறத் தூய்மையைப் பேணுவதில் உதவவும், ஒரு குழுவினை உருவாக்கி, நான்கைந்து ஆண்டுகள், அக்குழு, சிறப்பாக, தனது பணியினைச் செய்து வருகின்றது.  இந்த மாநாட்டுக்கு, திரு ஜீவ. ஸ்ரீநிவாசன் அவர்கள், தாமும், தமது குழுவினருடன், இந்த சன்மார்க்க மாநாட்டிற்கு வருவோருக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அவையனைத்தையும், மிகவும் கவனத்துடன் கனிவுடனும் செய்தார். மாநாடு நடைபெறுமுன்பே அவரது குழு, வடலூரை அடைந்து, அருட்பணிகளைப் பார்த்து வந்தது.  அவர் மற்றும் அவரது குழுவினருடைய பங்கு பாராட்டுதற்குரியது. ஐயா திரு ஜீவ ஸ்ரீநிவாசன் அவர்கள், 6.10.2017 அன்று மாலையில் திரு அருட்பா பாடல்களை மிக்க உருக்கத்துடன் பாடிப் பரவினார்.
IMG_20150708_122543.jpg

IMG_20150708_122543.jpg

Audio: