DAEIOU - தயவு
23.10.2016 Ramnad Dt.P.P.Endal village Gnana Guru Jothi Vallalar Dharmasalai..Students memorised Thirukural during the Sanmarga Flag Hoisting function.
    இன்று, (23.10.2016 ஞாயிற்றுக் கிழமை) காலை, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பார்த்திபனூர் அருகே உள்ள பெரிய பிச்சைப் பிள்ளையேந்தல் கிராமத்தில் உள்ள ஞான குரு ஜோதி வள்ளலார் தர்மச்சாலையில், 22ஆம் ஆண்டு அன்னதானப் பெருவிழா நடைபெற்றது.



பல்வேறு மாவட்டங்களிலுமிருந்தும் சன்மார்க்க அன்பர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் திரளாக, இந்த விழாவில் கலந்து கொண்டனர். சன்மார்க்கக் கொடி உயர்த்தப்பட்டதும், உள்ளூரில் வசிக்கும் மாணவர்கள், இங்கு வந்து, அவரவர் பயின்ற திருக்குறளினை ஒப்புவித்தனர். கூடியிருந்த அனைவருக்கும் இது மகிழ்ச்சியை அளித்தது. அதன்பின்னர், அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, (லேட்) சாது முத்துக்குமார் அவர்களின் குமாரர்கள் செய்திருந்தனர்.