DAEIOU - தயவு
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால், அருளியல் காரியங்கள்...இயல்பாகவே நிகழ்கின்றன.
கடந்த 12.6.2016 அன்று காலை, இலங்கை (இந்தியாவிற்குத் தெற்கில் அமைந்துள்ளது) யாழ்ப்பாணம் மாவட்டம், நல்லூரில், சமரச சுத்த சன்மார்க்க ஞானக் குடில், அன்பர் திரு ராஜேந்திரன் என்பவரால், துவக்க விழா செய்யப்பட்டு, சாவகச்சேரியில், சத்திய ஞான கோட்டம் (2010)ல் கட்டிய திரு கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், திறப்பு விழா கண்டது. திரு அருட்பா பதிகங்கள், அன்பர்களால் பாடப்பட்டன.  சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.



       அதே நாளில் (12.6.2016) அன்று மாலையில் சுமார் 6.30 மணி அளவில், மதுரை வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள மணியம்மை மழலையர் பள்ளியில், அகவை முதிர்ந்த தமிழறிஞர், பாவலர் திரு குறளடியான் அவர்கள், தெற்கில் உதித்த செஞ்சுடர் என்ற வள்ளற் பெருமான் பற்றிய நூலினை.அறிஞர் பெருமக்களை அழைத்து.திறனாய்வு செய்யச் செய்தார்.

        இலங்கையில், நல்லூரைச் சேர்ந்த திரு ராஜேந்திரனுக்கு மதுரையில், (தெற்கில் உதிஹ்த செஞ்சுடர் .. என்னும்) நூல் வெளியிடப்பட்ட விபரம் தெரியாது.

     அதேபோல், மதுரையில், இந்தப் புத்தகத்தை வெளியிட்ட திரு குறளடியானுக்கு, (இந்தியாவிற்குத் தெற்கில் அமைந்துள்ள) இலங்கை நாட்டில், ஒரு சத்திய ஞானக் குடில் ..அவர் புத்தகம் வெளிட்ட நாளன்று, அந்தப் புத்தகத்தின் தலைப்பிற்கேற்ப, தெற்கில், ஒரு செஞ்சுடர்ப் பூவாக, சத்திய ஞானக் குடில் திறப்பு விழா கண்டதும் தெரியாது. 

     இந்த அதிசயத்தை நிகழ்த்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையையும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் ஆசியையும்..என்னென்பது....

      வியப்பிற்கும் ஒரு அளவில்லை....
image-0.02.01.9e9b83784367f11603c0956016eea8572453cc4c1f98cd322044da2d747a841f-V.jpg

image-0.02.01.9e9b83784367f11603c0956016eea8572453cc4c1f98cd322044da2d747a841f-V.jpg

IMG_20160625_211317.jpg

IMG_20160625_211317.jpg

image-0.02.01.b505e0281db957efa42064ad0a9799cedce62fc466e951da880285599587b5fa-V.jpg

image-0.02.01.b505e0281db957efa42064ad0a9799cedce62fc466e951da880285599587b5fa-V.jpg