DAEIOU - தயவு
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில்.சத்திய ஞான சபை..கட்டுமானம்.
    திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்தவர். அவர், திரு அருட்பா இசைக் கச்சேரியினை, தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றார். அதனைத் தவிர, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளிலும், வள்ளற் பெருமானின் திரு அருட்பாக்களைக் குழுவினருடன் சென்று, இசைக் கச்சேரி செய்து, மக்களிடையே, சுத்த சன்மார்க்கம் பரப்பி வருகின்றார். அவர் மூலம், பல திரு அருட்பா பதிகங்கள், ஆடியோ சி.டி.யாக வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத் தலைவர் மேடா திரு நித்தியானந்தம் ஐயா அவர்கள் மூலம், இதுவரையில் மூன்று திரு அருட்பா பதிகங்கள் பாடி, ஆடியோ சி.டி.வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, பிள்ளைப் பெரு விண்ணப்பம்..என்ற பதிகத்திற்கு, அவர் இசை அமைத்துப் பாடி வருகின்றார். அவர், தனது சொந்த ஊரான திருபுவனத்தில், தனது சொந்த நிலத்தில், சத்திய ஞான சபையினைக் கட்டும் பணியினை மேற்கொண்டு வருகின்றார். 

     அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானாரும், சத்திய ஞான சபை கட்டும் அவரது முயற்சி விரைவில் நிறைவேற அருள் புரிய வேண்டிக் கொள்வோம்.
Athmanathan.jpg

Athmanathan.jpg