DAEIOU - தயவு
30.8.2015 மதுரை அரும்பனூர் தருமச்சாலையில் மாவட்ட சன்மார்க்க சங்கக் கூட்டம்.
கடந்த 30.8.2015 ஞாயிறு அன்று, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கூட்டம், அழகர் கோவில் ரோடில் (8 கி.மீ தூரம்) அமைந்துள்ள வள்ளலார் சத்திய தருமச்சாலை ட்ரஸ்டில், நடைபெற்றது.

       மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், திரு ஹரிகோவிந்தன், செயலாளர், திரு நாகசாமி, மூத்த சன்மார்க்க அன்பர்கள், திரு கொன்னமுத்து, திரு விஜயராமன், திரு ராமலிங்கம், திரு சங்கரானந்தம் ..சோழவந்தான் சன்மார்க்க சங்க நிர்வாகி, போன்றோர் சுமார் 25 நபர்கள் கலந்து கொண்டனர்.

     அனைவரும் ஆயுள் சந்தாதார்களாக வேண்டுமென தலைவர் கேட்டுக் கொண்டார். மதுரையிலும், வடலூரிலும், சன்மார்க்க சங்கத்துக்குக் கட்டிடம் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். வந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், தாம் முதற்கண், ஆயுள் சந்தாதாராச் சேருவதாகவும், ஒவ்வொருவரும், தலா ரூ.10,000/- (ரூ.பத்தாயிரம்) வடலூரில், மதுரை மாவட்டத்துக்கென, தனி கட்டிடம் / நிலம் வாங்க இந்தத் தொகையினை செலவிடும்படி கூறினர்.

     வராத சன்மார்க்க அங்கத்தினர்களிடம் நேரில் சென்று, இந்தத் தொகையினை வசூலிப்பதற்கு, 9 பேர் அடங்கிய குழு ஒன்றையும், நிறுவினர்.

     இந்த செய்தியைக் கண்ணுறும் வெளிநாடு வாழ் மதுரை சன்மார்க்க சங்க அங்கத்தினர்கள், தாமும், கட்டிட நிதியினை அளித்து, புண்ணியத்தில் பங்கு பெறும்படி தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தொகையினை, மாவட்டப் பொருளாளர் திரு தருமலிங்கம் அவர்களிடம் 2015 நவம்பர் மாதத்துக்குள் கொடுக்கும்படி, தலைவர் திரு ஹரி கோவிந்தன் கேட்டுக் கொண்டார்.




vlcsnap-2015-02-28-17h52m19s59.png

vlcsnap-2015-02-28-17h52m19s59.png

vlcsnap-2015-08-31-21h23m32s88.png

vlcsnap-2015-08-31-21h23m32s88.png

vlcsnap-2014-04-01-19h47m00s252.png

vlcsnap-2014-04-01-19h47m00s252.png

vlcsnap-2015-08-30-19h43m32s95.png

vlcsnap-2015-08-30-19h43m32s95.png

vlcsnap-2015-08-31-21h29m01s46.png

vlcsnap-2015-08-31-21h29m01s46.png

vlcsnap-2015-08-31-21h25m43s113.png

vlcsnap-2015-08-31-21h25m43s113.png

vlcsnap-2015-08-31-21h26m56s81.png

vlcsnap-2015-08-31-21h26m56s81.png