ஆண்டு தோறும், மார்கழி மாதத்தில், சென்னையில் உள்ள இசை அரங்குகளில், இசை விழா பல்வேறு இசைக் கலைஞர்களைக் கொண்டு அன்பர்கள் கேட்டின்புறுவதற்காக நடத்தப்பட்டு வருகின்றது. அவ்விசை விழாக்களைக் கண்டு கேட்பதற்கு, ஒரு பெரிய தொகை டிக்கட் மூலம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த இசை விழாக்களில், பங்கு பெறுவதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து இசை ஆர்வலர்கள் தமது பொன்னான நேரத்தைச் செலவழித்து, சென்னைக்கு வந்து, தொகை கொடுத்து, இந்த இசை விழாவில் பங்கேற்கின்றனர்.
ஆனால், வள்ளற்பெருமானாரின் திரு அருட்பா இசை விழா நடத்துவதற்கு யாரேனும் மெனக் கெடுவார்களா என்றால், இந்த கான சபாக்களில், அத்தகைய அருட்பாடல்கள் யாராலும் பாடப்படுவதில்லை. யாரும் இதற்கென முயற்சியும் மேற்கொள்வதுமில்லை. இவ்வளவுக்கும், வள்ளற் பெருமான், சென்னையில் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஏழுகிணறு வீராசாமி பிள்ளைத் தெருவில் தான் வசித்துள்ளார்கள். மரணமில்லாப் பெருவாழ்வினை அடைய, மனித குலத்துக்கு வழிவகை சொல்லிச் சென்றவர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திரு அருட்பாவினை, எவ்வாறேனும், சென்னையில், மார்கழி மாதத்தில் இசைக் கச்சேரியின் மூலம் பரப்பவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணத்தினால், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், கடந்த 9 ஆண்டுகளாக, பெருமுயற்சி மேற்கொண்டு, பல்வேறு சன்மார்க்க சான்றோர்களை பங்கேற்கச் செய்து, இசை,இயல். நாடகம், ஆன்மீகச் சொற்பொழிவு ஆகியவை மூலமாக, பரப்பி வருகின்றார். அந் நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு, மதியம் மற்றும் இரவு ஆகிய வேளைகளில், தக்க ஆன்றோர் பெருமக்களைக் கொண்டு, உணவும் அளிப்பதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த ஆண்டு, வரும் 25.12.2014 (வியாழன்) 26.12.2014 (வெள்ளி) , 27.12.2014 (சனி) ஆகிய 3 நாட்கள், 10ஆம் ஆண்டு இசைவிழாவாக திரு அருட்பா இசை விழா சென்னை டி.நகரில், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள டோர் எண்.157, ஹபிபுல்லா ரோடில், பசும்பொன் தேவர் மண்டபத்தில் இதனை நடத்துவதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், சன்மார்க்க அன்பர்கள் திரளாக, அனைவரும் இந்த அருமையான இசை விழாவில் பங்கு பெற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொள்கின்றார்.
ஆனால், வள்ளற்பெருமானாரின் திரு அருட்பா இசை விழா நடத்துவதற்கு யாரேனும் மெனக் கெடுவார்களா என்றால், இந்த கான சபாக்களில், அத்தகைய அருட்பாடல்கள் யாராலும் பாடப்படுவதில்லை. யாரும் இதற்கென முயற்சியும் மேற்கொள்வதுமில்லை. இவ்வளவுக்கும், வள்ளற் பெருமான், சென்னையில் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஏழுகிணறு வீராசாமி பிள்ளைத் தெருவில் தான் வசித்துள்ளார்கள். மரணமில்லாப் பெருவாழ்வினை அடைய, மனித குலத்துக்கு வழிவகை சொல்லிச் சென்றவர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திரு அருட்பாவினை, எவ்வாறேனும், சென்னையில், மார்கழி மாதத்தில் இசைக் கச்சேரியின் மூலம் பரப்பவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணத்தினால், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், கடந்த 9 ஆண்டுகளாக, பெருமுயற்சி மேற்கொண்டு, பல்வேறு சன்மார்க்க சான்றோர்களை பங்கேற்கச் செய்து, இசை,இயல். நாடகம், ஆன்மீகச் சொற்பொழிவு ஆகியவை மூலமாக, பரப்பி வருகின்றார். அந் நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு, மதியம் மற்றும் இரவு ஆகிய வேளைகளில், தக்க ஆன்றோர் பெருமக்களைக் கொண்டு, உணவும் அளிப்பதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த ஆண்டு, வரும் 25.12.2014 (வியாழன்) 26.12.2014 (வெள்ளி) , 27.12.2014 (சனி) ஆகிய 3 நாட்கள், 10ஆம் ஆண்டு இசைவிழாவாக திரு அருட்பா இசை விழா சென்னை டி.நகரில், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள டோர் எண்.157, ஹபிபுல்லா ரோடில், பசும்பொன் தேவர் மண்டபத்தில் இதனை நடத்துவதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், சன்மார்க்க அன்பர்கள் திரளாக, அனைவரும் இந்த அருமையான இசை விழாவில் பங்கு பெற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொள்கின்றார்.
Athmanathan photo.jpg
Atmanathan receiving..jpg
20141213_194132.jpg
20141213_194226.jpg
20141213_194414.jpg
20141213_194427.jpg
20141213_194448.jpg
20141213_194458.jpg
20141213_194518.jpg
20141213_194534.jpg
20141213_194546.jpg
20141213_194555.jpg
20141213_194603.jpg
20141213_194610.jpg
20141213_194625.jpg
திரு அருட்பா இசை விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்த இசை விழா குறித்து, சன்மார்க்க அன்பர்கள், தமது மாவட்டத்தில் உள்ள சன்மார்க்க சங்கங்கள் தோறும் இது குறித்துத் தெரிவித்து, இயன்ற அன்பர்களை, இந்த அருமையான விழாவில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பது, விழாக் குழுவினரின் கோரிக்கை.
Friday, December 19, 2014 at 06:11 am
by Daeiou Daeiou.
Write a comment