இந்தியாவில் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அரியாங்குப்பத்தில் சத்திய ஞான சபை அமைக்கப் பெரும்பங்கு ஆற்றிய, அன்பர் திரு அறிவழகன் அவர்கள், பாரிஸில் பணிபுரிகின்றார். இலங்கையில் சத்திய ஞான சபை, சத்திய தருமச்சாலை கடந்த 2010ஆம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்டபொழுது, அங்கு வந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இலங்கையில் பிறந்து தற்போது, பணியின் நிமித்தம் வசிக்கும் திரு கேதீஸ்வரன் அவர்களும் அவரது மனைவி திரு விஜியலட்சுமியும், பாரிஸ் சன்மார்க்க அன்பர், திரு அறிவழகனும், அவருடன் இலங்கை அன்பர் திரு மகேந்திரன், (சன்மார்க்க சங்கம்,பாரிஸ்) கடந்த 15.06.2014 அன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்ட்ஸ் சர்ச்சில் சந்தித்துக் கொண்டனர். இலங்கையில் கட்டப்பட்டுள்ள சத்திய ஞான கோட்டத்தினை, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் போதித்த சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து, தமது வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு, இலங்கை வாழ் மக்கள் அனைவரும் வருகை தரவேண்டும், அதன் செயல்பாடுகளுக்குத் தம்மால் இயன்ற ஆதரவையும் தர வேண்டும் என அவர் அன்று கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் பிறந்து தற்போது, பணியின் நிமித்தம் வசிக்கும் திரு கேதீஸ்வரன் அவர்களும் அவரது மனைவி திரு விஜியலட்சுமியும், பாரிஸ் சன்மார்க்க அன்பர், திரு அறிவழகனும், அவருடன் இலங்கை அன்பர் திரு மகேந்திரன், (சன்மார்க்க சங்கம்,பாரிஸ்) கடந்த 15.06.2014 அன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்ட்ஸ் சர்ச்சில் சந்தித்துக் கொண்டனர். இலங்கையில் கட்டப்பட்டுள்ள சத்திய ஞான கோட்டத்தினை, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் போதித்த சுத்த சன்மார்க்க நெறியினைத் தெரிந்து, தமது வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு, இலங்கை வாழ் மக்கள் அனைவரும் வருகை தரவேண்டும், அதன் செயல்பாடுகளுக்குத் தம்மால் இயன்ற ஆதரவையும் தர வேண்டும் என அவர் அன்று கோரிக்கை விடுத்தார்.
20140617_171820.jpg
20140615_131156.jpg
2013-02-02.jpg
20140124_125708.jpg
T.GANGADHARAN