26.12.09 & 27.12.09-வள்ளலார் வருவிக்கவுற்ற 187வது நாள் விழா-திருச்சி விழாவில் கண்ட
அகரம் - மருத்துவ சேவைப் பணி
மற்றும் அன்பர்களின் நோய் தீர்க்கும் காட்சி.
கடந்த 26.12.2009 மற்றும் 27.12.2009 ஆகிய நாட்களில், திருச்சியில் (1) திருச்சி (2) புதுகை (3) தஞ்சாவூர் (4) பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்கள் இணைந்து நடத்திய திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187ஆவது வருவிக்கவுற்ற நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது, அகரம் என்ற ஊரிலிருந்து, "அகரம் உயிர் நீட்டும் ஆய்வகம்" என்ற தலைப்பிட்ட ஆய்வகத்திலிருந்து Dr. சாது பாண்டுரங்கம் அவர்கள், மாநாட்டிற்கு வருகை புரிந்த அன்பர்களில், உடல் நலமில்லாதோர்களுக்கு, உடனடி சிகிச்சை செய்து அவர்களது உடற்பிணியினைத் தீர்த்து வைத்தார்.
அவரை வரவழைத்து, சன்மார்க்க அன்பர்களின் நோயைத் தீர்த்து வைத்த திருச்சி சன்மார்க்க அன்பர்கள், வாழ்த்துப் பெறுகின்றனர். வளர்க அவர்களது தொண்டு.
இதோ திரு பாண்டுரெங்கன், நோய் தீர்த்த காட்சிகள்: