பல்லடம் தாலுகா-பொங்கலூர் ரிச் இண்டியா நகரில் ஞான சபை கட்டுதல்.
பல்லடம் வட்டம் பொங்கலூரில் திருச்சி பல்லடம் சாலையில், ரிச் இண்டியா நகரில் அமைந்துள்ள (மகமாயி அம்மன் ஸ்பின்னிங் அருகில்) வள்ளலார் நகரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அமைக்க 25 சென்ட் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
இப்பணியில் சன்மார்க்க அன்பரும், வடலூர் பாவைக்குளம் ஞானசபையில் பூசகராக பல ஆண்டுகள் பணி செய்தவரும் வடலூரில் சன்மார்க்க பணி செய்தவரும் சிறந்த சன்மார்க்க அன்பரும் ஆகிய சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தலைமையில் இப் பணி மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.. இக்கட்டிடத் திருப்பணி சிறக்க சன்மார்க்க இறை அன்பர்கள் உறு துணையாக இருக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் திருப்பணிக் குழு, ரிச் இண்டியா நகர், பொங்கலூர்.
(இந்த நோட்டீஸ் பழனி தாலுகா கீரனூரில் சன்மார்க்க குருகுல விழாவில் மேற்படி சங்கத்தின் அன்பர்களால் வழங்கப்பட்டது.
தமிழகம் தோறும் வள்ளலாரின் ஞான சபைகள்-பல்லடம் தாலுகா-பொங்கலூர் ரிச் இண்டியா நகரில் ஞான சபை கட்டுதல்.
Thank U for Information.I will Pray God must.Vallalar Blessings to palladam gnana sabai.
With Vallalar Loving,
ArulJothiSujatha