மதுரை பாலரெங்காபுரத்தில் சுத்த சன்மார்க்க சத் விசார நிகழ்ச்சி.
நாள் 11.1.2009 நேரம் மாலை 6.30
செளராஷ்டிரா பள்ளியில் ஆசிரியராகப் பணி புரியும் திரு சந்திர சேகரன் அவர்களின்
இல்லத்தில் 11.1.2009 ஞாயிற்றுக் கிழமை மாலை சுத்த சன்மார்க்கச் சத் விசார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் 1) திரு T.R. ஜவஹர்லால் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், மதுரை. 2) திரு சுப்ரமணியம், செயலாளர், மாவட்ட சன்மார்க்க சங்கம், மதுரை. 3) திரு தயவு விஜயராமன்,.திருப்பரங்குன்றம் 4) திரு ராமானுஜம், மேனேஜிங் ட்ரஸ்டி, நாராயணபுரம், மதுரை 5) திரு ராதாகிருஷ்ணன், மதுரை. 6) மற்றும் 6 அன்பர்கள் வழக்கமாக சன்மார்க்கக் கூட்டங்களில், சத் விசாரம் செய்வதற்கு அன்பர்கள், அதிக ஆர்வம் காண்பிப்பதில்லை என்ற காரணத்தால், இந்தக் கூட்டம் இங்கு கூட்டப் பட்டதாக திரு சந்திர சேகரன் தெரிவித்தார். அன்பர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் தாம் கடந்த 20.12.2008 மற்றும் 21.12.2008 ஆகிய நாட்களில் மதுரையில் நடைபெற்ற வள்ளல் பெருமானின் சுத்த சன்மா ஏற்பட்டிருந்த சந்தேகங்களை எல்லாம், கேட்டார். மாவட்டத் தலைவரும் தயவு விஜயராமனும், மற்றும் திரு சந்திர சேகரனும் அவரது கேள்விகளுக்குரிய விளக்கங்களை அளித்தனர். அனைவரும் வள்ளலாரின் தனி நெறியான சுத்த சன்மார்க்க நெறி பிறழாது வாழ்க்கை நடத்தும்படி திரு சந்திர சேகரன் கேட்டுக் கொண்டார். வள்ளலாரின் ஸ்பேஸ் இணைய தளத்தின் பயன்பாடு குறித்து அன்பர் திரு ராமானுஜம் அனைவருக்கும் விளக்கிக் கூறினார். சுத்த சன்மார்க்கம் என்ற உயரிய நெறியே அகமிருந்து வாழ்தலே .. இல் வாழ்தலே என்று அவர் விளக்கிக் கூறினார். வள்ளல் பெருமான் காலத்தில் நாம் வாழ வில்லையே என்ற ஆதங்கம் ஏற்படாத வண்ணம், திண்டுக்கல்லில் வந்துதித்த சுவாமி சரவணானந்தா அவர்கள் தம்மிடம் வந்த அன்பர்களுக்கெல்லாம் அறிவு விளக்கத்தினை அளித்ததை அவர் நினைவு கூர்ந்தார். சுவாமிகள் வெளியிட்டுள்ள அருள் நூல்களை அனைவரும் படித்துப் பயன் பெற்று, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின் உண்மைப் பொருளினை உணர்ந்து படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அவர் மேலும் அன்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார். தயவு என்னும் நூல் உதயம். பின்னர், தயவு என்ற தலைப்பில் ஒரு மாதப் பத்திரிக்கை நடத்துவதற்கு அன்பர்கள் தமது ஆதரவினைத் தரவேண்டும் என திரு சந்திரசேகரன் கேட்டுக் கொண்டார். அதனை வள்ளலார் ஸ்பேஸ் (www.vallalarspace.com) இணைய தளத்தில் வெளியிடுவதற்கு ஆவன செய்யும்படி அவர் திரு ராமானுஜத்தைக் கேட்டுக் கொண்டார். உரிய தலைப்புக்களில் கட்டுரை, விரிவுரை முதலானவை எழுதிய பின் தெரிவித்தால், வள்ளலார்ஸ்பேஸ் நிர்வாகிகள் மூலம் இதற்கான ஏற்பாட்டினைத் தாம் செய்வதாக அவர் ஒப்புக் கொண்டார். இரவு 8.30 மணி அளவில வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் அன்னவிரயத்திற்குப் பின் கூட்டம் இனிதே முடிவடைந்தது.