DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

ரஷ்யாவில் வள்ளல் பெருமானின் ஆஸ்ரமம்

Ramanujam
posted 43 months ago
22 Jun 2008 01:55:37 GMT 1:55:37 AM

2507 views

ரஷ்யாவில் வள்ளல் பெருமானின் அருள் ஆட்சி.


               உலகெலாம் பரவ என்னுள்ளத்திருந்தேஅலகிலா ஒளிசெய் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அகவல்) வள்ளலார் ஸ்பேஸ்

 

இணையதளத்தில் திடீரென ஒரு நபர் –sveta என்ற பெயர் கொண்ட அவர், வள்ளல் பெருமானின் தொண்டரரன ச.மு.கந்தசாமி அய்யா

 

அவர்களின் போட்டோவினை அனுப்பி, இவர் யார் ? வள்ளலாரா ? அவர், யோக முறைகளில் என்ன சொல்கிறார் ? என்றெல்லாம் கேள்விகள்

 

கேட்டிருந்தார்.; இடையிடையே ரஷ்ய மொழி கலந்த செய்தியாக – அது ;இருந்ததால், www.vallalarspace Team , பெருமானைப் பற்றிய

 

செய்திகளை அறிவதற்கு

 www.vallalarspace  யுடன் இணையும்படி அழைப்பு விடுத்தது.

 

      அதற்கு வந்த பதில் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது.முதலில் இது குறித்த செய்தி அனுப்பிய sveta என்பவர்,  

 

 சோவியத் ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் St. Petersburg ல், தாம் வசிப்பதாகத் தெரிவித்தார்

 

தர்மஸ்தலம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.எனவும், தமது குரு (Monk) ஒருவர், இந்தியா வந்து, வள்ளல் பெருமானைப் பற்றிய

 

செய்திகளளயும், அவர், அகில உலக சகோதரத்துவத்துக்கு ஆற்றிய பெரும் பங்கிளையும் தெரிந்து கொண்டு,

 

ரஷ்யா சென்று அங்கு வள்ளல் பெருமானுக்கு City of Nizhnyi Novgorod என்ற இடத்தில்ஆலயம் எழுப்பியுள்ளார்.

 

கிட்டத்தட்ட 15 குருமார்கள், இப் பணியில் ஈடுபட்டு, ரஷ்யாவின் ஏனைய பகுதிகளிலும் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின்

 

மாண்புகளை, அந் நாட்டின் மனித குலம் அறியும் சீரிய பணியினை மேற்கொண்டுள்ளனர்.www.vallalar.org மூலம், வள்ளல் பெருமானைப் பற்றிய

 

செய்திகளை, தாம் முதலில் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கும், அவர் சார்ந்த அமைப்புக்கும், www.vallalarspace Team இடம்

 

ஒதுக்குவதற்கு, தனது இசைவினைத் தெரிவித்துள்ளது.  வெகு விரைவில் அவர்களும், www.vallalalrspace.com உடன் இணைய உள்ளனர் என்பது

 

ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

 

 

            இதுவரை நான் உங்களுக்குச் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டுள்ளீர்கள் என வள்ளல் பெருமான்

 

அன்றேகூறியுள்ளார்.

 

             இதே கருத்துக்களை, ருஷ்யாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் - நபர்கள் வந்து தெரிவிப்பார்கள் என்று ;தனது ஆதங்கத்தினை

 

வெளியிட்டுச் சென்றார். பெருமானின் அருட்;காட்சியைத் தெரிந்து கொண்டு Madam Blovtsky அம்மையார் ரஷ்யாவிலிருந்து, இந்தியா;வந்தார் –

 

சென்னையில் Theosophical Society அமைக்கப்பட்டது. வள்ளலாரின் கொள்கைகள் பரப்பப்பட்டன.

 

மேலே சொல்லப்பட்ட வள்ளல் பெருமானின் வரலாறு, அனைவரும் அறிந்ததே.

 

        காலம் பொன்னானது. மனித தேகத்தைப் பெற்றுக் கொண்ட நீவிர் ஒருபோதும் காலத்தை வீணில் கழிக்காதீர் என்ற வள்ளற் பெருமான் 

 

 சொல்லியும் சென்றுள்ளார்.

 

          ரஷ்யாவிலிருந்து வந்தாலும், சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு இன்னும் ஏன் கால தாமதம் ஆவானேன் என எண்ணினாரோ  என்னவோ

 

தெரியவில்லை. sveta தெரிவித்த தகவலின் மூலம் ரஷ்யாவிற்கே சென்று, தனது அருள் ஆட்சியை மலரச் செய்து விட்டார்.

 

          ஒரு நல்ல செய்திதானே இது.

 

 

.தயவுக் குழு
Tags: