தைப்பூசநாளின் சிறப்பு
Read (971 times)
on 7/8/2006 10:17:48 AM by Sargurubathem
சூரியன் வடதிசையில் சஞ்சரிக்கின்ற காலம் உத்தராயண காலம். உத்தராயணத்தில் முதல்மாதம் தைமாதம். தேவர்களுக்கு அது உதய காலம். அந்த மாதத்தில் சூரியன் மிகப்பிரகாசத்துடன் விளங்கும். சந்திரனும் கடகலக்கினத்தில் மிகப்பிரகாசிக்கும்.
தைமாதத்தில் வரும் பூசநாளன்று விடியற்காலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழுநிலவும், ஞானசபை நடுவில் அருட்பெருஞ்ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இவ்வாறு காணும் இந்தக் காட்சிதான் மிகச் சிறப்புடைய காட்சியாகும். இதுவே, தைப்பூச முதற்கால ஜோதிதரிசனமாகும்.
நன்றி : சன்மார்க்க சாதனையாளர் கோவை அ. குருநாதன் மற்றும் அண்ணன் பசுபதி அவர்கள்.